தமிழ்நாட்டில் இன்று 1700-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 1000-ஐக் கடந்து செல்கிறது.
இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,73,219-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஏற்கெனவே 633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 664-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக இன்று 11 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,641-ஆகவும், தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,487-ஆகவும் அதிகரித்துள்ளது. 1027 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,50,091 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets