மேலும் அறிய

NIA RAID: கோவையில் இரண்டு இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ; காரணம் என்ன?

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் இரண்டு இடங்களில் தேசிய புலனாவு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் காளப்பட்டி மற்றும் ஆலாந்துறை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த 2022 ம் ஆண்டில் சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே புளியம்பட்டி என்ற இடத்தில், ஓமலூர் காவல் துரையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் இருவரை காவல் துறையினர் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை காவல் துறையினர் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில், பிஸ்டல் ரகத்தினாலான நாட்டுத் துப்பாக்கிகள் 2, துப்பாக்கி வெடிமருந்து உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி (25), சேலம் செவ்வாய்பேட்டை மரமண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. பொறியியல் பட்டதாரிகளான அவர்கள், யூ-டியூப்-ஐ பார்த்து, துப்பாக்கி தயாரித்ததும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைப்போல, தாங்களும் ஒரு இயக்கத்தைத் தமிழகத்தில் தொடங்க விரும்பியதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், வெடிமருந்து, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆயுத சட்டம், வெடிபொருள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


NIA RAID: கோவையில் இரண்டு இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ; காரணம் என்ன?

இந்த நிலையில் நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் அளித்த தகவல்களின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் இரண்டு இடங்களில் தேசிய புலனாவு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியாக இவரது வீட்டில், தேசிய புலனாவு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான முருகன் பெங்களூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். முருகன் வீட்டிற்கு காலை 6.30 மணிக்கு வந்த அதிகாரிகள், 9 மணிக்கு சோதனை நடத்தினர். அப்போது முருகனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் சோதனையை முடித்து அதிகாரிகள் கிளம்பி சென்றனர். விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Embed widget