மேலும் அறிய

நாமக்கல் அருகே கடனை கேட்க நண்பருக்கு துணையாக சென்ற டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை

கத்தியுடன் துரத்திய செந்திலிடம் இருந்து சிவக்குமார் தப்பி ஓடிய நிலையில் சிவக்குமாருடன் உடன் வந்த டாஸ்மாக் ஊழியர் முருகேசனை செந்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், லாரி உரிமையாளரான இவர், தனது நண்பர் சிவக்குமாரின் சிபாரிசின் அடிப்படையில் காளப்பநாயக்கன்பட்டியில் செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கில் தனது லாரிக்கு டீசல் நிரப்பிய நிரப்பினார், ஆனால் நிரப்பிய டீசலுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார் லாரி உரிமையாளர் செந்தில். இதனால் செந்தில் கொடுக்க வேண்டிய பணத்தை அவரது நண்பரான சிவக்குமாரிடம் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். 

தகவலறிந்த சிவக்குமார் தனது மற்றொரு நண்பரான மலைவேப்பங்குட்டை  பகுதியைச் சேர்ந்தவரும் டாஸ்மாக் ஊழியராக இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டவரும் ஆன  முருகேசனை அழைத்துக் கொண்டு லாரி உரிமையாளர் செந்திலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

நாமக்கல் அருகே கடனை கேட்க நண்பருக்கு துணையாக சென்ற டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை

 

லாரிக்கு டீசல் நிரப்பியதற்கான நிலுவைத் தொகை குறித்து இருவரும் செந்திலிடம் கேட்டுள்ளனர். டீசலுக்கு பணம் தர முடியாது என லாரி உரிமையாளர் செந்தில் தெரிவித்ததால், செந்திலுக்கும் அவரது நண்பர் சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் கடுமையான வார்த்தைகளால் இரு தரப்பினரும் திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பணத்தை கேட்கச் சென்ற சிவக்குமாரும், முருகேசனும் செந்தில் வீட்டிலிருந்து புறப்பட்டனர். காளப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சிவக்குமாரும் முருகேசனும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆத்திரத்துடன் கத்திக் கொண்டு வந்த செந்தில் இருவரையும் வழிமறித்து கத்தியால் குத்த முயன்றார்.

 

நாமக்கல் அருகே கடனை கேட்க நண்பருக்கு துணையாக சென்ற டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை

அப்போது கத்தியுடன் துரத்திய செந்திலிடம் இருந்து சிவக்குமார் தப்பி ஓடிய நிலையில் சிவக்குமாருடன் உடன் வந்த டாஸ்மாக் ஊழியர் முருகேசனை செந்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த முருகேசன் மயங்கி விழுந்தார். படுகாயமடைந்த முருகேசனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டாஸ்மாக் ஊழியரான முருகேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளர் செந்திலை தேடி வருகின்றனர்.

நாமக்கல் அருகே கடனை கேட்க நண்பருக்கு துணையாக சென்ற டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை

இந்நிலையில் டாஸ்மாக் முருகேசன் கொலைக்கு காரணமான லாரி உரிமையாளர் செந்திலின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை வழக்கு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் முருகேசன் குடும்பத்திற்கு அரசுத்தரப்பில் இருந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்புலிகள் அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்ப்புலிகள் அமைப்பினரின் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தநிலையில் சேந்தமங்கலம்-நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget