மேலும் அறிய

நாமக்கல் அருகே கடனை கேட்க நண்பருக்கு துணையாக சென்ற டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை

கத்தியுடன் துரத்திய செந்திலிடம் இருந்து சிவக்குமார் தப்பி ஓடிய நிலையில் சிவக்குமாருடன் உடன் வந்த டாஸ்மாக் ஊழியர் முருகேசனை செந்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், லாரி உரிமையாளரான இவர், தனது நண்பர் சிவக்குமாரின் சிபாரிசின் அடிப்படையில் காளப்பநாயக்கன்பட்டியில் செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்கில் தனது லாரிக்கு டீசல் நிரப்பிய நிரப்பினார், ஆனால் நிரப்பிய டீசலுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார் லாரி உரிமையாளர் செந்தில். இதனால் செந்தில் கொடுக்க வேண்டிய பணத்தை அவரது நண்பரான சிவக்குமாரிடம் பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். 

தகவலறிந்த சிவக்குமார் தனது மற்றொரு நண்பரான மலைவேப்பங்குட்டை  பகுதியைச் சேர்ந்தவரும் டாஸ்மாக் ஊழியராக இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டவரும் ஆன  முருகேசனை அழைத்துக் கொண்டு லாரி உரிமையாளர் செந்திலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

நாமக்கல் அருகே கடனை கேட்க நண்பருக்கு துணையாக சென்ற டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை

 

லாரிக்கு டீசல் நிரப்பியதற்கான நிலுவைத் தொகை குறித்து இருவரும் செந்திலிடம் கேட்டுள்ளனர். டீசலுக்கு பணம் தர முடியாது என லாரி உரிமையாளர் செந்தில் தெரிவித்ததால், செந்திலுக்கும் அவரது நண்பர் சிவக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் கடுமையான வார்த்தைகளால் இரு தரப்பினரும் திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பணத்தை கேட்கச் சென்ற சிவக்குமாரும், முருகேசனும் செந்தில் வீட்டிலிருந்து புறப்பட்டனர். காளப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சிவக்குமாரும் முருகேசனும் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆத்திரத்துடன் கத்திக் கொண்டு வந்த செந்தில் இருவரையும் வழிமறித்து கத்தியால் குத்த முயன்றார்.

 

நாமக்கல் அருகே கடனை கேட்க நண்பருக்கு துணையாக சென்ற டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை

அப்போது கத்தியுடன் துரத்திய செந்திலிடம் இருந்து சிவக்குமார் தப்பி ஓடிய நிலையில் சிவக்குமாருடன் உடன் வந்த டாஸ்மாக் ஊழியர் முருகேசனை செந்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த முருகேசன் மயங்கி விழுந்தார். படுகாயமடைந்த முருகேசனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டாஸ்மாக் ஊழியரான முருகேசன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லாரி உரிமையாளர் செந்திலை தேடி வருகின்றனர்.

நாமக்கல் அருகே கடனை கேட்க நண்பருக்கு துணையாக சென்ற டாஸ்மாக் ஊழியர் குத்திக்கொலை

இந்நிலையில் டாஸ்மாக் முருகேசன் கொலைக்கு காரணமான லாரி உரிமையாளர் செந்திலின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை வழக்கு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் முருகேசன் குடும்பத்திற்கு அரசுத்தரப்பில் இருந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்புலிகள் அமைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்ப்புலிகள் அமைப்பினரின் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தநிலையில் சேந்தமங்கலம்-நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget