மேலும் அறிய

பொள்ளாச்சி: ஒழுங்காக படிக்காத மாணவரை கண்டித்த ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவனின் கன்னத்தில் அறைந்தும் கையால் நெஞ்சு மற்றும் வயிற்றில் குத்தியும் பரீட்சை அட்டையால் முதுகில் இரண்டு அடி அடித்தும் உள்ளதாகவும் கூறப்படுகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் லதாங்கி வித்யா மந்திர் என்ற தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனிடம், கடந்த 03.09.2024 ஆம் தேதி மாலை தமிழ் வகுப்பில் ஆசிரியர் சுரேஷ் குமார் என்பவர் புறநானூறு செய்யுளை பார்த்து அனைவரையும் நோட்டில் எழுத சொன்னதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவன் ஆசிரியர் சொன்னதை தவறுதலாக புரிந்து கொண்டு, மற்றொரு செய்யுளை தனது நோட்டில் எழுதியுள்ளார்.

இதனை பார்த்த ஆசிரியர் சுரேஷ்குமார் மாணவனை கண்டித்து உள்ளார். மேலும் மாணவன் வேண்டுமென்று இதை செய்வதாக எண்ணி மாணவனின் கன்னத்தில் அறைந்தும். கையால் நெஞ்சு மற்றும் வயிற்றில் குத்தியும் பரிச்சை அட்டையால் முதுகில் இரண்டு அடி அடித்தும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவன் வலி தாங்க முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வெளி நோயாளியாக சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக மாணவனின் பெற்றோர் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை பேர் மேற்கொண்டு வருகின்றனர். மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் போக்சோவில் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டத்தின் கீழ் அறிவியல் பிராக்டிகல் வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதில் காரமடையை அடுத்த கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த மகன் அய்யாசாமி (வயது 39) என்பவர் வந்து வகுப்பு எடுத்துள்ளார். அப்போது ஏழாம் வகுப்புக்கு அவர் பாடம் எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையே அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், அந்த ஆசிரியரிடம் எங்கள் வகுப்பிற்கு எப்போது பாடம் எடுக்க வருவீர்கள் என்று கேட்டதற்கு, அதற்கு ஆசிரியர் அய்யாசாமி, இரவு 11 மணிக்கு வருகிறேன் பாய் எடுத்து வை என்று சொல்லியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக அந்த மாணவி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மூலம்  பெரியநாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர் பேசியது உண்மை என்று தெரிய வந்ததன் பேரில் அய்யாசாமி மீது காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: கண் முன்னே நொறுங்கிய குஜராத் விமானம்; மகளைப் பார்க்கச்சென்ற முன்னாள் முதல்வர் நிலை என்ன?
Ahmedabad Plane Crash Video: கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
கரும்புகையால் சூழப்பட்ட விமான நிலையம்.. அகமதாபாத்தின் பரபரப்பு காட்சிகள்
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Embed widget