மேலும் அறிய

கோவை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள்.. பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்

3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக கோவையில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தொடர் விடுமுறையால் கோவையில் இருந்து வெளியூர் செல்ல அதிகளவு பயணிகள் குவிந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சனி, ஞாயிறு வார விடுமுறை நாள் மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தின விழா அரசு விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதேபோல அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் என வெளியூரிலிருந்து வந்து பணியாற்றும் பலரும் மூன்று நாட்கள் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதில் விருப்பம் காட்டி வருகின்றனர். 


கோவை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள்.. பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்

குறிப்பாக சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களுக்கு அதிகளவிலான பயணிகள் வந்தனர். அங்கிருந்து அரசுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். இதையொட்டி கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையிலிருந்து மட்டும் சுமார் நாற்பது சிறப்பு பேருந்துகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இருப்பதால், தென் மாவட்டங்களான திருச்சி, தேனி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு பெரும்பாலான சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள்.. பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்

கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் அதிகளவில் வருவதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கும் வகையில் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. சாதாரண காலங்களில் இருப்பதை விட ஆம்னி பேருந்து கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் இன்று 2,000 முதல் 3,000 வரை விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. 


கோவை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள்.. பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்

காந்திபுரம் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனிடையே காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆம்னி பேருந்துகளில் பயணித்த பயணிகளிடம் பஸ் கட்டணம் எவ்வளவு? கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும் பேருந்து நடத்துநர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ச்சியாக ஆம்னி பேருந்துகள் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதோடு, பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க போதிய அளவு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Embed widget