மேலும் அறிய

கோவை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள்.. பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்

3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக கோவையில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தொடர் விடுமுறையால் கோவையில் இருந்து வெளியூர் செல்ல அதிகளவு பயணிகள் குவிந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சனி, ஞாயிறு வார விடுமுறை நாள் மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தின விழா அரசு விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதேபோல அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் என வெளியூரிலிருந்து வந்து பணியாற்றும் பலரும் மூன்று நாட்கள் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதில் விருப்பம் காட்டி வருகின்றனர். 


கோவை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள்.. பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்

குறிப்பாக சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களுக்கு அதிகளவிலான பயணிகள் வந்தனர். அங்கிருந்து அரசுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். இதையொட்டி கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையிலிருந்து மட்டும் சுமார் நாற்பது சிறப்பு பேருந்துகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இருப்பதால், தென் மாவட்டங்களான திருச்சி, தேனி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு பெரும்பாலான சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள்.. பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்

கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் அதிகளவில் வருவதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கும் வகையில் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. சாதாரண காலங்களில் இருப்பதை விட ஆம்னி பேருந்து கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் இன்று 2,000 முதல் 3,000 வரை விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. 


கோவை : தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பயணிகள்.. பேருந்து நிலையங்களில் குவிந்த கூட்டம்

காந்திபுரம் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனிடையே காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆம்னி பேருந்துகளில் பயணித்த பயணிகளிடம் பஸ் கட்டணம் எவ்வளவு? கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும் பேருந்து நடத்துநர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ச்சியாக ஆம்னி பேருந்துகள் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதோடு, பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க போதிய அளவு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget