மேலும் அறிய

கோவை : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான கே.சி.பி நிறுவனம் ; வெளியான புதிய ஆவணங்கள்..!

கே.சி.பி நிறுவனம் மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் இல்லத்தை, பல லட்சம் செலவில் புணரமைத்து கொடுத்துள்ளதற்கான ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான 810 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில்  முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்லம் அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார், ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் மற்றும்  மாநகராட்சி தலைமைப் பொறியாளர் லட்சுமணன் இல்லம், மாநகராட்சி  முன்னாள் துணை ஆணையர் காந்திமதி இல்லம், உதவி பொறியாளர் சரவணன் இல்லம், உதவி பொறியாளர் ரவி இல்லம் உள்ளிட்ட  42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், கேசிபி இன்ஜினியரிங் நிர்வாக இயக்குநருமான சந்திர பிரகாஷுக்கு சொந்தமான கேசிபி இன்ஜினியரிங் நிறுவனத்தில் இரண்டாவது நாள் சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


கோவை : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான கே.சி.பி நிறுவனம் ; வெளியான புதிய ஆவணங்கள்..!

இந்நிலையில்  லஞ்ச ஒழிப்பு சோதனைக்குள்ளான சந்திரபிரகாஷின் கே.சி.பி நிறுவனம் மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் இல்லத்தை பல லட்சம் செலவில் புணரமைத்து கொடுத்துள்ளதற்கான  ஆவணங்கள் வெளியாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளின் அரசு குடியிருப்புகளை பொதுப்பணித் துறை மட்டுமே செய்யக்கூடிய இந்த பணிகளை கேசிபி இன்ஜினியரிங் முறைகேடாக புதுப்பித்து தந்துள்ளது தெரியவந்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தலைமை பொறியாளர் இல்லத்தை கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனம் பல லட்ச ரூபாய் செலவு செய்து புணரமைப்பு செய்து கொடுத்துள்ளது. இதற்காக  கேசிபி இன்ஜினியரிங் நிறுவனம் புணரமைப்பு செய்ய கட்டுமான பொருட்கள் வாங்கிய பில்களில் நகல் வெளியாகி உள்ளது. என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டது? என்னென்ன பொருட்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் அதில் உள்ளன.


கோவை : லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான கே.சி.பி நிறுவனம் ; வெளியான புதிய ஆவணங்கள்..!

அரசு கட்டிடங்களை வழக்கமாக  பொதுப்பணித் துறையே சரிசெய்து கொடுக்கும்  நிலையில், கே.சி.பி நிறுவனம் மாநகராட்சி அதிகாரிகளின் அரசு குடியிருப்பை நவீன வசதிகளுடன் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளது. வாஸ்து நிபுணர்கள் ஆலோசனையுடன் கே.சி.பி இஞ்சினியரிங் நிறுவனம் புணரமைப்பு பணிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமும் பல லட்சம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளதால், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஒப்பந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் அதற்கான பில் தொகை செட்டில் செய்யப்படும்போது, காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் தலைமை பொறியாளர் இலட்சுமணனுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (28-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (27-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (27-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Vellalore Bus Terminal: கோவை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! வெள்ளலூரில் உருவாகும் புதிய பேருந்து முனையம் – முழு விவரம்!
Coimbatore Vellalore Bus Terminal: கோவை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! வெள்ளலூரில் உருவாகும் புதிய பேருந்து முனையம் – முழு விவரம்!
மீண்டும் வேகம் எடுக்கும் கோவை மேற்கு புறவழிச்சாலை! தமிழக அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு!
மீண்டும் வேகம் எடுக்கும் கோவை மேற்கு புறவழிச்சாலை! தமிழக அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்
டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! - தவெக அரசின் மாஸ் பிளான்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
3 Consecutive Days Holidays : செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Embed widget