மேலும் அறிய

புளியங்காய் ஆசைப்பட்டு போன உயிர்... கோவையில் மரத்திலேயே கருகிய உடல் மீட்பு...

கோவையில் புளிய மரத்தில் காய் பறிக்க ஏறிய தொழிலாளி மீது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – மரத்திலேயே கருகிய உடல் மீட்பு.

கோவை அருகே புளிய மரத்தில் புளியங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரும்பு கம்பியுடன் மரத்தில் ஏறிய தொழிலாளி

கோவை அருகேயுள்ள கோட்டைபாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் சம்பத் (வயது சுமார் 40). இவர் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன் அஷ்யந்த் ஆகியோருடன் நேற்று கோவை – சக்தி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள குரும்பபாளையம் பகுதியில் புளியங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த பகுதியில் உள்ள உயரமான புளிய மரத்தில் இருந்து காய்களை பறிப்பதற்காக, சம்பத் சுமார் 15 அடி நீளமுள்ள இரும்புக் கம்பியை பயன்படுத்தி மரத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது, கவனக்குறைவாக இரும்புக் கம்பி மரத்துக்கு அருகே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், சம்பத்துக்கு திடீரென மின்சாரம் தாக்கி, அவரது உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை

மின்சாரம் தாக்கிய வேகத்தில், சம்பத் மரத்தின் கிளைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டதால் உடலை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் கூச்சலிட்டனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும் மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மின்வாரிய அதிகாரிகளின் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மரத்தில் கருகிய நிலையில் சிக்கியிருந்த சம்பத்தின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனை-க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாத வகையில், மின் கம்பிகளை மாற்றியமைக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் பணியாற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை இளைஞர்களுக்கு கொண்டாட்டம்! IBM-ன் அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பெருகும், வளர்ச்சி உச்சம்!
கோவை இளைஞர்களுக்கு கொண்டாட்டம்! IBM-ன் அடுத்த அதிரடி: வேலைவாய்ப்பு பெருகும், வளர்ச்சி உச்சம்!
"ஹீரோ ஆக ஆசை இல்லை" - தீயாய் பரவும் குக் வித் கோமாளி புகழ் பேச்சு
காதல் வலியாய் மாறிய வெறிச்செயல்… 16 வயது சிறுமி, பாட்டி படுகொலை...
காதல் வலியாய் மாறிய வெறிச்செயல்… 16 வயது சிறுமி, பாட்டி படுகொலை...
”அரசியலால் ஆன்மீகத்தை அடக்க முடியாது” - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அதிரடி பேச்சு
”அரசியலால் ஆன்மீகத்தை அடக்க முடியாது” - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அதிரடி பேச்சுதி.மு.க-க்கு சவால் விடும் தேசிய ஜனநாயக கூட்டணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Embed widget