மேலும் அறிய

’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

21 நாட்களாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் இரவு பகலாக புலியைத் தேடி வந்த நிலையில், இன்று புலி வனத்துறையிடம் சிக்கியது. மாயார் அருகே பிற்பகலில் டி 23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா , கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த டி 23 புலியை பிடிக்கும் பணிகள் ஆப்ரேசன் டி 23 என்ற பெயரில் நடைபெற்று வந்தது. 21 நாட்களாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் இரவு பகலாக புலியைத் தேடி வந்த நிலையில், இன்று புலி வனத்துறையிடம் சிக்கியது. மாயார் அருகே பிற்பகலில் டி 23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட புலியை வனத் துறை அமைச்சர் ராமசந்திரன் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து மசினகுடி சோதனை சாவடியில்  வனத் துறை அமைச்சர் ராமசந்திரன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை வனப்பாதுகாவர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், “இன்று மதியம் 2.30 மணிக்கு மசினகுடி வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கும்கி யானை மீது அமர்ந்து மயக்க ஊசி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட வனத்துறை வரலாற்றில் இதற்கு முன்பு 3 ஆட்கொல்லி புலிகள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கின்றது. முதல் முறையாக இந்த புலி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு டி 23 புலியை மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புலியின் காயங்கள் முழுமையாக குணமடைந்த பின்னரே, அதை மைசூரிலேயே வைத்திருப்பதா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்கா கொண்டு வருவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

டி 23 புலி 13 வயதான புலி என்பதால் வனத்தில் இடத்தை பிடிக்கும் போட்டியில்  இளம்புலிகள் இந்த புலியை தாக்கி இருக்கின்றது. அதனால் புலியின்  உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. உரிய மருத்துவ சிகிச்சைக்காகவே மைசூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டது” என அவர் தெரிவித்தார்.


’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

இதனை தொடர்ந்து பேசிய முதன்மை வனபாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், ”இன்று ஓரே ஒரு முறை மட்டுமே டி 23 புலிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. நேற்று இரவு மயக்க ஊசி போடவில்லை. இரவு ஊசி செலுத்த முயற்சி செய்தோம். ஆனால் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை” என அவர் தெரிவித்தார்.


’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

பின்னர் பேசிய முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, ”அரசின் முக்கியமான நோக்கம் இந்த புலி உயிருடன் இருக்க வேண்டும் என்பது தான். இந்த அரசின் முடிவு புலியை கொல்லக்கூடாது என்பதால், மிக எச்சரிக்கையாக புலி பிடிக்கப்பட்டது. புலியின் இதயதுடிப்பு உட்பட உடல் நிலை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. 4 வனத்துறை மருத்துவர்கள் T23 புலியுடன் மைசூர்  செல்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
Coimbatore power cut: கோவையன்ஸ் உஷார்! நாளை (14-07-2026) பவர் கட்: உங்கள் பகுதிக்கும் உண்டா? முழு பட்டியல் உள்ளே!
கோவையன்ஸ் உஷார்! நாளை (14-07-2026) பவர் கட்: உங்கள் பகுதிக்கும் உண்டா? முழு பட்டியல் உள்ளே!
coimbatore power cut (13-07-2026): முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
முக்கிய அறிவிப்பு: ஜூலை 13-ல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு! எந்தெந்த இடங்கள் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget