மேலும் அறிய

’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

21 நாட்களாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் இரவு பகலாக புலியைத் தேடி வந்த நிலையில், இன்று புலி வனத்துறையிடம் சிக்கியது. மாயார் அருகே பிற்பகலில் டி 23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா , கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த டி 23 புலியை பிடிக்கும் பணிகள் ஆப்ரேசன் டி 23 என்ற பெயரில் நடைபெற்று வந்தது. 21 நாட்களாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் இரவு பகலாக புலியைத் தேடி வந்த நிலையில், இன்று புலி வனத்துறையிடம் சிக்கியது. மாயார் அருகே பிற்பகலில் டி 23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட புலியை வனத் துறை அமைச்சர் ராமசந்திரன் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து மசினகுடி சோதனை சாவடியில்  வனத் துறை அமைச்சர் ராமசந்திரன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை வனப்பாதுகாவர் சேகர் குமார் நீரஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், “இன்று மதியம் 2.30 மணிக்கு மசினகுடி வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கும்கி யானை மீது அமர்ந்து மயக்க ஊசி செலுத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட வனத்துறை வரலாற்றில் இதற்கு முன்பு 3 ஆட்கொல்லி புலிகள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கின்றது. முதல் முறையாக இந்த புலி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு டி 23 புலியை மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புலியின் காயங்கள் முழுமையாக குணமடைந்த பின்னரே, அதை மைசூரிலேயே வைத்திருப்பதா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்கா கொண்டு வருவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

டி 23 புலி 13 வயதான புலி என்பதால் வனத்தில் இடத்தை பிடிக்கும் போட்டியில்  இளம்புலிகள் இந்த புலியை தாக்கி இருக்கின்றது. அதனால் புலியின்  உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது. உரிய மருத்துவ சிகிச்சைக்காகவே மைசூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டது” என அவர் தெரிவித்தார்.


’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

இதனை தொடர்ந்து பேசிய முதன்மை வனபாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், ”இன்று ஓரே ஒரு முறை மட்டுமே டி 23 புலிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. நேற்று இரவு மயக்க ஊசி போடவில்லை. இரவு ஊசி செலுத்த முயற்சி செய்தோம். ஆனால் மயக்க ஊசி செலுத்த முடியவில்லை” என அவர் தெரிவித்தார்.


’டி 23 புலிக்கு மைசூரில் சிகிச்சை’ – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

பின்னர் பேசிய முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, ”அரசின் முக்கியமான நோக்கம் இந்த புலி உயிருடன் இருக்க வேண்டும் என்பது தான். இந்த அரசின் முடிவு புலியை கொல்லக்கூடாது என்பதால், மிக எச்சரிக்கையாக புலி பிடிக்கப்பட்டது. புலியின் இதயதுடிப்பு உட்பட உடல் நிலை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. 4 வனத்துறை மருத்துவர்கள் T23 புலியுடன் மைசூர்  செல்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
TNEB CM Vijay : ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
Embed widget