மேலும் அறிய

ஏழ்மை நிலையிலும் பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிலம் தந்த முதியவர் - கைமாறாக வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்..!

“நா தா படிக்கல. நம்ம வூரு குழந்தைக படிச்சு மேல வரட்டும்” என தனது 10 செண்ட் நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட வழங்கினார். சிறிய அளவிலான குடிசையில் வசித்த போதும், எந்த எதிர்பார்ப்புமின்றி நிலத்தை வழங்கினார்.

ஈரோட்டில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் மலை கிராமம் கொங்காடை. பர்கூர் மலைப்பகுதியில் கடைக்கோடி கிராமமான அவ்வூரை, அண்மையில் தான் பேருந்தே எட்டிப் பார்த்துள்ளது. மலைமுகடுகளும்,  பசுமை போர்த்திய காடுகளும் சூழ்ந்த இந்த பகுதியில் ஊராளி பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கல்வி பெறாத பழங்குடியின குழந்தைகள், பள்ளிக்கு செல்லாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி வந்தனர். இந்த நிலையை மாற்றி அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு சுடர் அமைப்பு சார்பில் குழந்தை தொழிலாலர் சிறப்புப் பள்ளி கொங்காடை கிராமத்தில் அமைக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இந்த பள்ளியில் 2 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தன் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டது. கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. அச்சூழலில் பள்ளிக்கூடம் கட்ட இடம் தேடிய போது, அப்பகுதியை சேர்ந்த சடையன் என்ற 75 வயது முதியவர் தனது நிலத்தை தானமாக வழங்க முன்வந்தார்.


ஏழ்மை நிலையிலும் பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிலம் தந்த முதியவர் - கைமாறாக வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்..!

“நா தா படிக்கல. நம்ம வூரு குழந்தைக படிச்சு மேல வரட்டும்” என தனது 10 செண்ட் நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட வழங்கினார். இதற்கும் அவர் மிகச்சிறிய அளவிலான குடிசையில் வசித்து வந்த போதும், எந்த எதிர்பார்ப்புமின்றி தனது நிலத்தை மாணவர்களின் கல்விக்காக வழங்கினார். இதையடுத்து 3.5 இலட்ச ரூபாய் செலவில் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில உதவியுள்ளது. 


ஏழ்மை நிலையிலும் பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிலம் தந்த முதியவர் - கைமாறாக வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்..!

இதனிடையே  சடையனின் உதவிக்கு கைமாறு செய்யும் வகையில் தன்னார்வலர்கள் இணைந்து ஒரு வீடு கட்டித் தர முடிவு செய்தனர். இதன்படி அவரது குடிசைக்கு அருகே பல்வேறு கொடையாளர்கள் உதவியுடன் 3 இலட்ச ரூபாய் மதிப்பில் இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் வீடு கட்டப்பட்டது. இந்த வீட்டிற்கு பழங்குடியின போராளி ’பிர்சா முண்டா இல்லம்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இல்லத்தை நேற்று திமுக துணை பொதுச்செயலாளர்  சுப்புலட்சுமி ஜெகதீசன் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த வீடு சடையனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பேசிய சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ், “சடையன் தாத்தா 6*8 என்ற அளவிலான சிறிய குடிசையில் வசித்து வந்தார். அந்த குடிசைக்குள் ஒருபெரிய கரையான் புற்று இருந்தது. அதனை ஏன் இடிக்கவில்லை எனக் கேட்டதற்கு ‘அதுக்குள்ள உயிரு இருக்கு’ என ஆச்சரியப்படுத்தினார். இப்படி இயற்கையை சிதைக்காமல் வாழ்வது தான் பழங்குடிகளின் இயல்பு. 


ஏழ்மை நிலையிலும் பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிலம் தந்த முதியவர் - கைமாறாக வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்..!

பொதுவாக அனைத்து மக்களுக்கும் மண் மீது அதிக பாசம் இருக்கும். அவ்வளவு எளிதாக நிலத்தை தரமாட்டார்கள். ஆனால் சடையன் தாத்தவிற்கு 5 வாரிசுகள் இருந்த போதும், பள்ளிக்கூடம் கட்ட நிலம் தனது நிலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என எந்த எதிர்பார்ப்பும் இன்றி நிலத்தை தந்தார். இந்த பள்ளிக்கூடத்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளனர். இரண்டு பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.  சடையன் தாத்தா வசிக்கும் வீடு எங்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. அதனால் கொடையாளர்கள் உதவியுடன் வீடு கட்டி சடையன் தாத்தாவிடம் வழங்கியுள்ளோம். இது எங்களுக்கும், சடையன் தாத்தாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget