மேலும் அறிய

ஏழ்மை நிலையிலும் பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிலம் தந்த முதியவர் - கைமாறாக வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்..!

“நா தா படிக்கல. நம்ம வூரு குழந்தைக படிச்சு மேல வரட்டும்” என தனது 10 செண்ட் நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட வழங்கினார். சிறிய அளவிலான குடிசையில் வசித்த போதும், எந்த எதிர்பார்ப்புமின்றி நிலத்தை வழங்கினார்.

ஈரோட்டில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் மலை கிராமம் கொங்காடை. பர்கூர் மலைப்பகுதியில் கடைக்கோடி கிராமமான அவ்வூரை, அண்மையில் தான் பேருந்தே எட்டிப் பார்த்துள்ளது. மலைமுகடுகளும்,  பசுமை போர்த்திய காடுகளும் சூழ்ந்த இந்த பகுதியில் ஊராளி பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கல்வி பெறாத பழங்குடியின குழந்தைகள், பள்ளிக்கு செல்லாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி வந்தனர். இந்த நிலையை மாற்றி அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு சுடர் அமைப்பு சார்பில் குழந்தை தொழிலாலர் சிறப்புப் பள்ளி கொங்காடை கிராமத்தில் அமைக்கப்பட்டது. குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இந்த பள்ளியில் 2 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தன் காரணமாக இட நெருக்கடி ஏற்பட்டது. கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. அச்சூழலில் பள்ளிக்கூடம் கட்ட இடம் தேடிய போது, அப்பகுதியை சேர்ந்த சடையன் என்ற 75 வயது முதியவர் தனது நிலத்தை தானமாக வழங்க முன்வந்தார்.


ஏழ்மை நிலையிலும் பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிலம் தந்த முதியவர் - கைமாறாக வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்..!

“நா தா படிக்கல. நம்ம வூரு குழந்தைக படிச்சு மேல வரட்டும்” என தனது 10 செண்ட் நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட வழங்கினார். இதற்கும் அவர் மிகச்சிறிய அளவிலான குடிசையில் வசித்து வந்த போதும், எந்த எதிர்பார்ப்புமின்றி தனது நிலத்தை மாணவர்களின் கல்விக்காக வழங்கினார். இதையடுத்து 3.5 இலட்ச ரூபாய் செலவில் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயில உதவியுள்ளது. 


ஏழ்மை நிலையிலும் பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிலம் தந்த முதியவர் - கைமாறாக வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்..!

இதனிடையே  சடையனின் உதவிக்கு கைமாறு செய்யும் வகையில் தன்னார்வலர்கள் இணைந்து ஒரு வீடு கட்டித் தர முடிவு செய்தனர். இதன்படி அவரது குடிசைக்கு அருகே பல்வேறு கொடையாளர்கள் உதவியுடன் 3 இலட்ச ரூபாய் மதிப்பில் இயற்கை சூழலுக்கு ஏற்ற வகையில் வீடு கட்டப்பட்டது. இந்த வீட்டிற்கு பழங்குடியின போராளி ’பிர்சா முண்டா இல்லம்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இல்லத்தை நேற்று திமுக துணை பொதுச்செயலாளர்  சுப்புலட்சுமி ஜெகதீசன் திறந்து வைத்தார். இதையடுத்து அந்த வீடு சடையனிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பேசிய சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.சி.நடராஜ், “சடையன் தாத்தா 6*8 என்ற அளவிலான சிறிய குடிசையில் வசித்து வந்தார். அந்த குடிசைக்குள் ஒருபெரிய கரையான் புற்று இருந்தது. அதனை ஏன் இடிக்கவில்லை எனக் கேட்டதற்கு ‘அதுக்குள்ள உயிரு இருக்கு’ என ஆச்சரியப்படுத்தினார். இப்படி இயற்கையை சிதைக்காமல் வாழ்வது தான் பழங்குடிகளின் இயல்பு. 


ஏழ்மை நிலையிலும் பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிலம் தந்த முதியவர் - கைமாறாக வீடு கட்டித் தந்த தன்னார்வலர்கள்..!

பொதுவாக அனைத்து மக்களுக்கும் மண் மீது அதிக பாசம் இருக்கும். அவ்வளவு எளிதாக நிலத்தை தரமாட்டார்கள். ஆனால் சடையன் தாத்தவிற்கு 5 வாரிசுகள் இருந்த போதும், பள்ளிக்கூடம் கட்ட நிலம் தனது நிலத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என எந்த எதிர்பார்ப்பும் இன்றி நிலத்தை தந்தார். இந்த பள்ளிக்கூடத்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளனர். இரண்டு பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.  சடையன் தாத்தா வசிக்கும் வீடு எங்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. அதனால் கொடையாளர்கள் உதவியுடன் வீடு கட்டி சடையன் தாத்தாவிடம் வழங்கியுள்ளோம். இது எங்களுக்கும், சடையன் தாத்தாவிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget