மேலும் அறிய

ஈரோட்டில் அதிமுகவினர் கூடிய மண்டபத்திற்கு சீல் - அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ஈரோடு கிருஷ்ணன் பாளையத்தில் உள்ள பிரகாஷ் திருமண மண்டபத்தில் அதிமுகவினர் அனுமதி இன்றி கூட்டம் நடத்தி பொது மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது.

ஈரோட்டில் அதிமுகவினர் அனுமதியின்றி கூட்டமாக கூடியிருந்த தனியார் திருமண மண்டபத்தை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த நிலையில், அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் அந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.,வான தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணியில் பல்வேறு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து சில வேட்பாளர்கள் கூட்டம் சாட்டி வந்தனர். இந்நிலையில் ஈரோடு கிருஷ்ணன் பாளையத்தில் உள்ள பிரகாஷ் திருமண மண்டபத்தில் அதிமுகவினர் அனுமதி இன்றி கூட்டம் நடத்தி பொது மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மண்டபத்தில் நுழைந்து சோதனை நடத்த முயன்றனர்.


ஈரோட்டில் அதிமுகவினர் கூடிய மண்டபத்திற்கு சீல் - அதிகாரிகளுடன் வாக்குவாதம்

அப்போது அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஈரோடு நகர காவல்துறை கண்காணிப்பாளர் அனந்தகுமார் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, காவல் துறையினரின் உதவியோடு தேர்தல் அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள பைகள் மற்றும் பீரோக்களில் சோதனை செய்தனர். பின்னர் அதிமுகவினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அவர்களை மண்டபத்தை விட்டு வெளியேற்றி விட்டு தேர்தல் அதிகாரிகள் பிரகாஷ் திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுகவினர், ”இந்த தொகுதியின் திமுக தேர்தல் பொறுப்பாளரான செந்தில் பாலாஜி தூண்டுதலின் பெயரில் காவல் துறை இவ்வாறு செயல்படுகிறது. ஆளும் கட்சியினர் காவல் துறையை ஏவி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்” எனக் குற்றம்சாட்டினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget