மேலும் அறிய

கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

பாரதியார் இயற்றிய குயில் பாட்டை அடிப்படையாகக் கொண்டு ’குயில் தோப்பு’ அமைக்கப்படுகிறது. அப்பாடலின் சூழலை காட்சிப்படுத்தும் பணியில், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மரம் அறக்கட்டளை செய்து வருகிறது.

கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் பாரதியாரை போற்றும் வகையில், ‘காணி நிலம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அப்பல்கலைகழக வளாகத்திற்குள் பாரதியாரை நினைவு கூறும் வகையில் நினைவுத் தூண், அருங்காட்சியம், மண்டபம், பாரதியாரின் படைப்புகள் கொண்ட நூலகம், பூங்கா, குயில் தோப்பு, பாரதியார் எழுதுவது போன்ற சிலை, ஓவியங்கள் ஆகியவை இடம் பெற உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

இதில் சிறப்பம்சமாக மகாகவி பாரதியார் இயற்றிய குயில் பாட்டை அடிப்படையாகக் கொண்டு ’குயில் தோப்பு’ அமைக்கப்பட்டு வருகிறது. அப்பாடலில் இடம் பெற்றுள்ள சூழலை காட்சிப்படுத்தும் பணியில், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மரம் அறக்கட்டளை செய்து வருகிறது. குயில் தோப்பில் குயில் பாட்டில் இடம் பெற்றுள்ள அனைத்து மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி அரியவகை மரங்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட வகையான மரங்கள் நடவு செய்யப்பட உள்ளன. அங்கு பழைய கால முறைப்படி கதவு, திண்ணை கொண்ட ஒரு குடில் அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு கிணறு, பறவைகள் வந்து செல்லும் வகையில் குளம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.


கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

இதுகுறித்து பேசிய மரம் அறக்கட்டளை நிறுவனர் யோகநாதன் கூறுகையில், “மகாகவி பாரதியார் மிகப்பெரிய கனவு குயில் தோப்பு.  அதனை காட்சியாக உருவாக்கி வருகிறோம். அந்தப் பாடலில் உள்ள சவுக்கு, மா, தென்னை, பனை, வேங்கை உள்ளிட்ட அனைத்து மரங்களும் நடவு செய்யப்படும். 



கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

பாரதியாரை அடுத்த தலைமுறை மக்களிடம் கொண்டு செல்லும் இது இதுவரை யாரும் செய்யாத முயற்சி. பாரதியார் உடன் வீட்டில் தங்கியிருந்த உணர்வையும், மகிழ்ச்சியையும் தரும் வகையில் இவை செய்யப்பட்டு வருகின்றன. குயில் தோப்பிற்கு வந்தால் பல வகையான மரங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். கோவையில் பொழுதுபோக்கு இடங்கள் குறைவாக உள்ள நிலையில், மக்கள் குடும்பத்துடன் வந்து செல்லும் வகையில் சுற்றுலாதலமாக இந்த இடம் மாறும். 


கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

காடாக இருந்த இடத்தை சுத்தப்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மரம் நடும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. மரங்களை வளர்த்தெடுக்கும் பணிகள் 10 ஆண்டுகளுக்கு தொடரும்” எனத் தெரிவித்தார்.


கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

கோவையை சேர்ந்த யோகநாதன், அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மரங்கள் மீது கொண்ட தீராக்காதலால், தனது பணிக்கு நிகரான நேரத்தையும், தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரங்கள் வளர்ப்பிற்கு செலவிட்டு வருகிறார். 36 ஆண்டுகளாக மரங்களை பாதுகாக்கும் பெரும் பணியை செய்து வருகிறார். இவர் இலட்சக்கணக்கான மரங்களை நடவு செய்ததோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்தும் வருகிறார். விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளை யோகநாதன் தொடர்ந்து செய்து வருகிறார். அடுத்த கட்டமாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சூழல் சார்ந்த சிறு நூல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget