மேலும் அறிய

கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

பாரதியார் இயற்றிய குயில் பாட்டை அடிப்படையாகக் கொண்டு ’குயில் தோப்பு’ அமைக்கப்படுகிறது. அப்பாடலின் சூழலை காட்சிப்படுத்தும் பணியில், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மரம் அறக்கட்டளை செய்து வருகிறது.

கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் பாரதியாரை போற்றும் வகையில், ‘காணி நிலம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அப்பல்கலைகழக வளாகத்திற்குள் பாரதியாரை நினைவு கூறும் வகையில் நினைவுத் தூண், அருங்காட்சியம், மண்டபம், பாரதியாரின் படைப்புகள் கொண்ட நூலகம், பூங்கா, குயில் தோப்பு, பாரதியார் எழுதுவது போன்ற சிலை, ஓவியங்கள் ஆகியவை இடம் பெற உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

இதில் சிறப்பம்சமாக மகாகவி பாரதியார் இயற்றிய குயில் பாட்டை அடிப்படையாகக் கொண்டு ’குயில் தோப்பு’ அமைக்கப்பட்டு வருகிறது. அப்பாடலில் இடம் பெற்றுள்ள சூழலை காட்சிப்படுத்தும் பணியில், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மரம் அறக்கட்டளை செய்து வருகிறது. குயில் தோப்பில் குயில் பாட்டில் இடம் பெற்றுள்ள அனைத்து மரங்களும் நடவு செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி அரியவகை மரங்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட வகையான மரங்கள் நடவு செய்யப்பட உள்ளன. அங்கு பழைய கால முறைப்படி கதவு, திண்ணை கொண்ட ஒரு குடில் அமைக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு கிணறு, பறவைகள் வந்து செல்லும் வகையில் குளம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.


கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

இதுகுறித்து பேசிய மரம் அறக்கட்டளை நிறுவனர் யோகநாதன் கூறுகையில், “மகாகவி பாரதியார் மிகப்பெரிய கனவு குயில் தோப்பு.  அதனை காட்சியாக உருவாக்கி வருகிறோம். அந்தப் பாடலில் உள்ள சவுக்கு, மா, தென்னை, பனை, வேங்கை உள்ளிட்ட அனைத்து மரங்களும் நடவு செய்யப்படும். 



கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

பாரதியாரை அடுத்த தலைமுறை மக்களிடம் கொண்டு செல்லும் இது இதுவரை யாரும் செய்யாத முயற்சி. பாரதியார் உடன் வீட்டில் தங்கியிருந்த உணர்வையும், மகிழ்ச்சியையும் தரும் வகையில் இவை செய்யப்பட்டு வருகின்றன. குயில் தோப்பிற்கு வந்தால் பல வகையான மரங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். கோவையில் பொழுதுபோக்கு இடங்கள் குறைவாக உள்ள நிலையில், மக்கள் குடும்பத்துடன் வந்து செல்லும் வகையில் சுற்றுலாதலமாக இந்த இடம் மாறும். 


கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

காடாக இருந்த இடத்தை சுத்தப்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மரம் நடும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. மரங்களை வளர்த்தெடுக்கும் பணிகள் 10 ஆண்டுகளுக்கு தொடரும்” எனத் தெரிவித்தார்.


கோவையில் பாரதியார் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ’குயில் தோப்பு’; மரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி

கோவையை சேர்ந்த யோகநாதன், அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மரங்கள் மீது கொண்ட தீராக்காதலால், தனது பணிக்கு நிகரான நேரத்தையும், தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரங்கள் வளர்ப்பிற்கு செலவிட்டு வருகிறார். 36 ஆண்டுகளாக மரங்களை பாதுகாக்கும் பெரும் பணியை செய்து வருகிறார். இவர் இலட்சக்கணக்கான மரங்களை நடவு செய்ததோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்தும் வருகிறார். விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளை யோகநாதன் தொடர்ந்து செய்து வருகிறார். அடுத்த கட்டமாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சூழல் சார்ந்த சிறு நூல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Embed widget