கோவை மின் தடை: நாளை(டிசம்பர் 31) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கோவை மாவட்டத்தில் நாளை(டிசம்பர் 31, புதன்கிழமை), மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் எவை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நாளை(டிசம்பர் 31, புதன்கிழமை), மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் எவை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவை மின் தடை :
கோவை மாவட்டத்தில், உக்கடம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில், நாளை ( டிசம்பர் 31, புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் சுமார் 7 மணி நேரத்திற்கு மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் கீழ்காணும் நிலையங்களுக்கு உட்பட்ட எந்தெந்த பகுதிகளில் நாளை மின்சார சப்ளை இருக்காது என தெரிந்து கொள்ளலாம்.
உக்கடம் : வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்





















