மேலும் அறிய

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவு சமீபத்தில் தனியாரால் நடத்தப்படும் `பாரத் கௌரவ் ரயில்’ சேவையைத் தமிழ்நாட்டின் கோவையில் இருந்து மகாராஷ்ட்ராவின் ஷிர்டிக்குத் தொடங்கியுள்ளது. 

இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவு சமீபத்தில் தனியாரால் நடத்தப்படும் `பாரத் கௌரவ் ரயில்’ சேவையைத் தமிழ்நாட்டின் கோவையில் இருந்து மகாராஷ்ட்ராவின் ஷிர்டிக்குத் தொடங்கியுள்ளது. 

`கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து சாய்நகர் ஷிர்டி செல்லும் பாரத் கௌரவ் ரயில் ஜூன் 14 அன்று மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, ஜூன் 16 அன்று காலை 7.25 மணிக்கு சாய்நகர் ஷிர்டி சென்றடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், யெலஹங்கா, தர்மவரம், மந்திராலயம் சாலை, வாடி முதலான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்’ என மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், முதன்முதலான இந்த ரயில் புறப்பட்ட போது, அதில் சுமார் 1100 பேர் பயணித்துள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

பாரத் கௌரவ் ரயில் சேவையைத் தனியார் சேவை நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது. மொத்தம் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான இந்தத் திட்டத்தின் கோவை முதல் ஷிர்டி வரை செல்வதையும், மீண்டும் திரும்பி வருவதையும் சேர்த்து முழுவதுமாக இந்த சேவை வழங்கப்படுகிறது. 

இந்த ரயிலை சௌத் ஸ்டார் ரயில் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம் ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டஸ் சர்வீஸஸ் என்ற நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தெற்கு ரயில்வேயிற்கு 1 கோடி ரூபாய் பணத்தை வைப்புத் தொகையாக வழங்கியுள்ளதோடு, 20 பெட்டிகள் கொண்ட ரயிலைப் பெற்றுள்ளது. 

மத்திய ரயில்வே துறை இதுகுறித்து கூறிய போது, `ரயிலைப் பயன்படுத்த வருடாந்திர கட்டணமாக இந்த ரயில் 27.79 லட்சம் ரூபாய் தொகையையும், கூடுதலாக காலாண்டு பயணக் கட்டணமாக 76.77 லட்சம் ரூபாய் தொகையையும் கட்டணமாக செலுத்தியுள்ளது. மேலும், தற்போதைய பயணத்திற்கான கட்டணமாக 38.22 லட்சம் ரூபாய் பணத்தையும் செலுத்தியுள்ளது. இதில் ஜி.எஸ்.டி தனியாக சேர்க்கப்படும்’ எனக் கூறியுள்ளது. 

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

இந்த ரயில் ஒரு முதல் அடுக்கு ஏசி கோச், மூன்று 2-அடுக்கு ஏசி கோச்கள், 8 3-அடுக்கு ஏசி கோச்கள், 5 ஸ்லீப்பர் கோச்கள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 

`ரயிலை நடத்தும் தனியார் நிறுவனம் ரயிலின் உள்பகுதிகளை மீண்டும் வடிவமைத்துள்ளனர். மேலும், அவ்வபோது நேரத்திற்கு சுத்தம் செய்யும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு சேவைகளை வழங்கும் பணியாளர்கள் இருப்பதால் இது சிறந்த அனுபவமாக இருக்கும். மேலும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காகவும், பக்திப் பாடல்கள், மந்திரங்கள் ஆகியவற்றை ஒளிபரப்புவதற்காகவும் அனைத்து பெட்டிகளிலும் பொது ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பயணக் கட்டணம் கோவை முதல் ஷிர்டி செல்வதற்கும், மீண்டும் திரும்பி வருவதற்கும் மட்டுமின்றி, விஐபி தரிசனம், பேருந்து சேவை, ஏசியுடன் கூடிய தங்கும் வசதி, பயணத்திற்கான வழிகாட்டி சேவை எனப் பலவற்றை வழங்குகிறது’ என மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது.

ரயில்வே காவல்துறை இருப்பதோடு, அவசர காலங்களில் உதவுவதற்காக இந்த ரயிலில் மருத்துவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள வரலாற்றுத் தலங்களை இணைக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில்களை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget