மேலும் அறிய

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவு சமீபத்தில் தனியாரால் நடத்தப்படும் `பாரத் கௌரவ் ரயில்’ சேவையைத் தமிழ்நாட்டின் கோவையில் இருந்து மகாராஷ்ட்ராவின் ஷிர்டிக்குத் தொடங்கியுள்ளது. 

இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவு சமீபத்தில் தனியாரால் நடத்தப்படும் `பாரத் கௌரவ் ரயில்’ சேவையைத் தமிழ்நாட்டின் கோவையில் இருந்து மகாராஷ்ட்ராவின் ஷிர்டிக்குத் தொடங்கியுள்ளது. 

`கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து சாய்நகர் ஷிர்டி செல்லும் பாரத் கௌரவ் ரயில் ஜூன் 14 அன்று மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, ஜூன் 16 அன்று காலை 7.25 மணிக்கு சாய்நகர் ஷிர்டி சென்றடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், யெலஹங்கா, தர்மவரம், மந்திராலயம் சாலை, வாடி முதலான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்’ என மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், முதன்முதலான இந்த ரயில் புறப்பட்ட போது, அதில் சுமார் 1100 பேர் பயணித்துள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

பாரத் கௌரவ் ரயில் சேவையைத் தனியார் சேவை நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது. மொத்தம் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான இந்தத் திட்டத்தின் கோவை முதல் ஷிர்டி வரை செல்வதையும், மீண்டும் திரும்பி வருவதையும் சேர்த்து முழுவதுமாக இந்த சேவை வழங்கப்படுகிறது. 

இந்த ரயிலை சௌத் ஸ்டார் ரயில் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம் ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டஸ் சர்வீஸஸ் என்ற நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தெற்கு ரயில்வேயிற்கு 1 கோடி ரூபாய் பணத்தை வைப்புத் தொகையாக வழங்கியுள்ளதோடு, 20 பெட்டிகள் கொண்ட ரயிலைப் பெற்றுள்ளது. 

மத்திய ரயில்வே துறை இதுகுறித்து கூறிய போது, `ரயிலைப் பயன்படுத்த வருடாந்திர கட்டணமாக இந்த ரயில் 27.79 லட்சம் ரூபாய் தொகையையும், கூடுதலாக காலாண்டு பயணக் கட்டணமாக 76.77 லட்சம் ரூபாய் தொகையையும் கட்டணமாக செலுத்தியுள்ளது. மேலும், தற்போதைய பயணத்திற்கான கட்டணமாக 38.22 லட்சம் ரூபாய் பணத்தையும் செலுத்தியுள்ளது. இதில் ஜி.எஸ்.டி தனியாக சேர்க்கப்படும்’ எனக் கூறியுள்ளது. 

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

இந்த ரயில் ஒரு முதல் அடுக்கு ஏசி கோச், மூன்று 2-அடுக்கு ஏசி கோச்கள், 8 3-அடுக்கு ஏசி கோச்கள், 5 ஸ்லீப்பர் கோச்கள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 

`ரயிலை நடத்தும் தனியார் நிறுவனம் ரயிலின் உள்பகுதிகளை மீண்டும் வடிவமைத்துள்ளனர். மேலும், அவ்வபோது நேரத்திற்கு சுத்தம் செய்யும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு சேவைகளை வழங்கும் பணியாளர்கள் இருப்பதால் இது சிறந்த அனுபவமாக இருக்கும். மேலும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காகவும், பக்திப் பாடல்கள், மந்திரங்கள் ஆகியவற்றை ஒளிபரப்புவதற்காகவும் அனைத்து பெட்டிகளிலும் பொது ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பயணக் கட்டணம் கோவை முதல் ஷிர்டி செல்வதற்கும், மீண்டும் திரும்பி வருவதற்கும் மட்டுமின்றி, விஐபி தரிசனம், பேருந்து சேவை, ஏசியுடன் கூடிய தங்கும் வசதி, பயணத்திற்கான வழிகாட்டி சேவை எனப் பலவற்றை வழங்குகிறது’ என மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது.

ரயில்வே காவல்துறை இருப்பதோடு, அவசர காலங்களில் உதவுவதற்காக இந்த ரயிலில் மருத்துவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள வரலாற்றுத் தலங்களை இணைக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில்களை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
Embed widget