மேலும் அறிய

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவு சமீபத்தில் தனியாரால் நடத்தப்படும் `பாரத் கௌரவ் ரயில்’ சேவையைத் தமிழ்நாட்டின் கோவையில் இருந்து மகாராஷ்ட்ராவின் ஷிர்டிக்குத் தொடங்கியுள்ளது. 

இந்திய ரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவு சமீபத்தில் தனியாரால் நடத்தப்படும் `பாரத் கௌரவ் ரயில்’ சேவையைத் தமிழ்நாட்டின் கோவையில் இருந்து மகாராஷ்ட்ராவின் ஷிர்டிக்குத் தொடங்கியுள்ளது. 

`கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து சாய்நகர் ஷிர்டி செல்லும் பாரத் கௌரவ் ரயில் ஜூன் 14 அன்று மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, ஜூன் 16 அன்று காலை 7.25 மணிக்கு சாய்நகர் ஷிர்டி சென்றடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், யெலஹங்கா, தர்மவரம், மந்திராலயம் சாலை, வாடி முதலான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்’ என மத்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், முதன்முதலான இந்த ரயில் புறப்பட்ட போது, அதில் சுமார் 1100 பேர் பயணித்துள்ளதாகவும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

பாரத் கௌரவ் ரயில் சேவையைத் தனியார் சேவை நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறது. மொத்தம் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான இந்தத் திட்டத்தின் கோவை முதல் ஷிர்டி வரை செல்வதையும், மீண்டும் திரும்பி வருவதையும் சேர்த்து முழுவதுமாக இந்த சேவை வழங்கப்படுகிறது. 

இந்த ரயிலை சௌத் ஸ்டார் ரயில் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம் ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டஸ் சர்வீஸஸ் என்ற நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தெற்கு ரயில்வேயிற்கு 1 கோடி ரூபாய் பணத்தை வைப்புத் தொகையாக வழங்கியுள்ளதோடு, 20 பெட்டிகள் கொண்ட ரயிலைப் பெற்றுள்ளது. 

மத்திய ரயில்வே துறை இதுகுறித்து கூறிய போது, `ரயிலைப் பயன்படுத்த வருடாந்திர கட்டணமாக இந்த ரயில் 27.79 லட்சம் ரூபாய் தொகையையும், கூடுதலாக காலாண்டு பயணக் கட்டணமாக 76.77 லட்சம் ரூபாய் தொகையையும் கட்டணமாக செலுத்தியுள்ளது. மேலும், தற்போதைய பயணத்திற்கான கட்டணமாக 38.22 லட்சம் ரூபாய் பணத்தையும் செலுத்தியுள்ளது. இதில் ஜி.எஸ்.டி தனியாக சேர்க்கப்படும்’ எனக் கூறியுள்ளது. 

Bharat Gaurav Scheme: 1100 பயணிகளுடன் கோவையில் இருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ரயில்! முழு விவரம்..

இந்த ரயில் ஒரு முதல் அடுக்கு ஏசி கோச், மூன்று 2-அடுக்கு ஏசி கோச்கள், 8 3-அடுக்கு ஏசி கோச்கள், 5 ஸ்லீப்பர் கோச்கள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 

`ரயிலை நடத்தும் தனியார் நிறுவனம் ரயிலின் உள்பகுதிகளை மீண்டும் வடிவமைத்துள்ளனர். மேலும், அவ்வபோது நேரத்திற்கு சுத்தம் செய்யும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு சேவைகளை வழங்கும் பணியாளர்கள் இருப்பதால் இது சிறந்த அனுபவமாக இருக்கும். மேலும், தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காகவும், பக்திப் பாடல்கள், மந்திரங்கள் ஆகியவற்றை ஒளிபரப்புவதற்காகவும் அனைத்து பெட்டிகளிலும் பொது ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பயணக் கட்டணம் கோவை முதல் ஷிர்டி செல்வதற்கும், மீண்டும் திரும்பி வருவதற்கும் மட்டுமின்றி, விஐபி தரிசனம், பேருந்து சேவை, ஏசியுடன் கூடிய தங்கும் வசதி, பயணத்திற்கான வழிகாட்டி சேவை எனப் பலவற்றை வழங்குகிறது’ என மத்திய ரயில்வே துறை கூறியுள்ளது.

ரயில்வே காவல்துறை இருப்பதோடு, அவசர காலங்களில் உதவுவதற்காக இந்த ரயிலில் மருத்துவர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் உள்ள வரலாற்றுத் தலங்களை இணைக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில்களை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget