மேலும் அறிய

காவல் துறையினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட பெண்! குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!

மிரட்டுவதையும், அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில், இவரின் நடவடிக்கை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் சட்டத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவையில் காவல் துறையினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளில் கைதான விஷ்வதர்ஷினி என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வதர்சினி. 44 வயதான இவர் பேஸ்புக் மூலம் கோவை சேரன் மாநகரை சேர்ந்த செலினா என்பவருடன் பழகி, தான் டைகர்வே என்ற டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சொல்லி 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். பின்பு பின்பு பணத்தை திரும்ப கேட்கும் போது போப்புக்கை தவறாக பயன்படுத்தி, செலினவை பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செலினா அளித்த மோசடி புகாரின் பேரில் செல்வபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த மே 8 ம் தேதி விஸ்வதர்சினியை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

மேலும் விஷ்வதர்சினி கோவை காவல்துறைக்கு எதிராக பொது மக்களை தூண்டும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும், பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக செல்வபுரம் உதவி ஆய்வாளர் ராஜா கொடுத்த புகாரில் மீண்டும் செல்வபுரம் காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இது தவிர்த்து ஏற்கனவே விஷ்வதர்சினிமீது துடியலூர் காவல் நிலையத்தில் காவல் துறையிருடன் ஆபாசமாக பேசி பணி செய்ய விடமால் தடுத்தது, பிரகாஷ் ஸ்வாமி என்பவரை மிரட்டியது என வழக்குகள் இருக்கின்றன. மேலும் விஷ்வதர்சினி மீது கடந்த 2018 ஆம் வருடம் ஒரு சிறுமியை பற்றி சமூகவலை தளத்தில் அவதூறு பரப்பியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டு, போக்சோ சிறப்பு நீதிமன்றம மூன்று வருட சிறை தண்டனை விதித்து தண்டணை அனுபவித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷ்வதர்சினி தொடர்ந்து பொது மக்களையும், காவல் துறையினரையும் மிரட்டுவதையும், அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில், இவரின் நடவடிக்கை கட்டுபடுத்தும் பொருட்டு கோவை மாநகர காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்தனர். கோவை மத்திய பெண்கள் சிறையில் இருக்கும் விஷ்வதர்சினியிடம் இதற்கான உத்திரவினை காவல் துறையினர் வழங்கினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget