மேலும் அறிய

காஞ்சிபுரம்: மணலில் புதைந்த வடமாநிலத் தொழிலாளர்கள்; நிலை தெரியாமல் திணறல்!

காஞ்சிபுரம் அடுத்த பட்டா கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் மண் சரிந்து 2 வடமாநில தொழிலாளர்கள் புதையுண்டனர். வெளிச்சமின்மை மற்றும் மழையால் மீட்பு பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் 70 க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இயங்கி வரும் கல்குவாரிகள் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் சுற்றியுள்ள மாவட்டங்களில் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

காஞ்சிபுரம்: மணலில் புதைந்த வடமாநிலத் தொழிலாளர்கள்; நிலை தெரியாமல் திணறல்!
 
தற்பொழுது ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எம்.சாண்ட் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள கல் குவாரிகள் வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம்: மணலில் புதைந்த வடமாநிலத் தொழிலாளர்கள்; நிலை தெரியாமல் திணறல்!
 
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் வட்டம், உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் இயங்கி வரும் ஆர்.எஸ் மைன்ஸ் என்ற கல்குவாரியில் சென்னையை பகுதியை சேர்ந்த செல்வேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான  ஆர்எஸ் மைன்ஸ் என்ற பெயரில் கல்குவாரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் அறவை இயந்திரத்தைப் பயன்படுத்தி எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது.
 

காஞ்சிபுரம்: மணலில் புதைந்த வடமாநிலத் தொழிலாளர்கள்; நிலை தெரியாமல் திணறல்!
 
இந்நிறுவனத்தில் தமிழ்நாடு மற்றும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் . இந்த நிறுவனத்தில் உத்திர பிரதேசம் பகுதியை சேர்ந்த ஷேர்கான் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில்ஷேத்திரி ஆகியோர் ஜேசிபி எனப்படும் எந்திரத்தை இயக்கும்  ஆபரேட்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
 

காஞ்சிபுரம்: மணலில் புதைந்த வடமாநிலத் தொழிலாளர்கள்; நிலை தெரியாமல் திணறல்!
 
நேற்று மாலை ஆறு மணியிலிருந்து அப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று நேற்று மாலை 6 30 இருவரும் இயந்திரம் அருகே சென்று பராமரிப்பு பணி மேற்கொள்ள சென்றபோது திடீரென மண்சரிந்து சுமார் 30அடியில் மண்புதையில் சிக்கினர். இதை கண்ட மற்றொரு ஊழியர் தமிழ்வாணன் கூச்சலிட்டு அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து சாலவாக்கம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர் பேரில் ஆய்வாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கும் , வருவாய் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
 

காஞ்சிபுரம்: மணலில் புதைந்த வடமாநிலத் தொழிலாளர்கள்; நிலை தெரியாமல் திணறல்!
 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
விபத்து பகுதியில் போதிய வெளிச்சம் இன்மை மற்றும் தொடர் மழை காரணமாக மீட்பு பணிகளை அதிகாலையிலிருந்து தொடங்க முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவிட்டார். மணலில் சிக்கியவர்கள் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து உடல்களை மீட்பது குறித்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது . இன்று காலை முதல் மீட்பு பணி துவங்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மண் சரிந்து இரண்டு பேர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது..
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget