மேலும் அறிய

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது - ஓ.பி.எஸ் ஏன் இப்படி சொன்னார்

ஆண்டிற்கு 500 கடைகள் என்ற அடிப்படையில், கிட்டத்தட்ட 2,000 கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதைக்கூட தி.மு.க. செய்யவில்லை.

தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழக மக்களைப் பற்றியும் கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளின் மூலம் வருமானத்தைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

2016 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போதே, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ' பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. மதுப் பழக்கத்தினால்தான் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதாக தி.மு.க.வினரால் மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு முற்றிலும் முரணாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகளின்மூலம் பெறப்படும் வருவாய் அதிகரித்துக் கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நிலையில் மதுவிலக்கு குறித்து செய்தியாளர்களிடையே பேசிய மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள், டாஸ்மாக் கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு துளி கூட விருப்பம் கிடையாது என்றும், டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும்; முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம் என்றும், மது குடிப்பவர்களை படிப்படியாக அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும் என்றும், அப்புறம்தான் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மாண்புமிகு அமைச்சரின் இந்தப் பேட்டி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சமூக மாற்றம் மற்றும் மக்கள் நலனை உறுதி செய்யும் வகையில், பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்த தி.மு.க., 40 மாத கால ஆட்சிக்குப் பிறகு, உடனடியாக மதுக் கடைகளை மூட முடியாது என்று கூறுவது மக்கள் நலனில் தி.மு.க.விற்கு உள்ள அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாண்புமிகு அமைச்சரின் கூற்றுப்படி வைத்துக் கொண்டாலும், ஆண்டிற்கு 500 கடைகள் என்ற அடிப்படையில், கிட்டத்தட்ட 2,000 கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதைக்கூட தி.மு.க. செய்யவில்லை.

12-04-2023 அன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, 500 தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இந்த ஆண்டு மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், எத்தனைக் கடைகள் மூடப்பட்டன ? எத்தனை கடைகள் புதிதாக திறக்கப்பட்டன ? என்பது குறித்த விவரம் தி.மு.க. அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், பல இடங்களில் புதிதாக மதுக் கடைகள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கேற்ப , சென்னை, மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே வெங்கட்கிருஷ்ணா சாலையில் தி.மு.க.வினரின் அமோக ஆதரவோடு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததே தவிர, புதிதாக திறக்கப்பட்ட

டாஸ்மாக் கடையை மூட எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய மதுக்கடைகளை திறப்பது என்பது தொடர் கதையாக இருந்து கொண்டு வருகிறது.

இதன்மூலம் மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மட்டுமே தி.மு.க. அரசு எடுத்து வருகிறது என்பது தெளிவாகிறது.

மதுக் கடைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்காண்டு குறைக்கவும், புதிய கடைகள் திறக்கப்படுவதை தடுக்கவும், இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலத்திற்குள் அனைத்துக் கடைகளையும் மூடும் வகையில் மதுப்பிரியர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கவும், தமிழ்நாட்டில் இயங்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறித்து முகவரியுடன் கூடிய புள்ளி விவரங்களை வெளியிடவும் தி.மு.க. அரசு முன்வர வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
சென்னை: பள்ளிக்கு சென்ற தாய், மகள் லாரி மோதி பரிதாப மரணம்! பெரும்பாக்கத்தில் சோகம்!
" மக்கள் நூலகம் திறப்பு " மாணவர்கள் , இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதை !!
பல்லாவரம் இரட்டை கொலை: ரவுடி ஆறுமுகம், நண்பர் சதீஷ் படுகொலை! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!
பல்லாவரம் இரட்டை கொலை: ரவுடி ஆறுமுகம், நண்பர் சதீஷ் படுகொலை! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!
குப்பை எரிஉலை அல்ல... அது மெல்லக் கொல்லும் விஷம்!
குப்பை எரிஉலை அல்ல... அது மெல்லக் கொல்லும் விஷம்!" - சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து: அன்புமணி எச்சரிக்கை!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி வகுப்பறையை அடித்து நொறுக்கும் மாணவ, மாணவிகள்; வைரலான வீடியோ- நடந்தது என்ன?
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Embed widget