மேலும் அறிய

Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!

”மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்தில் ஒரு கோடி பேர் கையெழுத்து போட்டுவிட்டால், தமிழக மக்கள் மும்மொழி கொள்கைக்கு வரவேற்பு அளித்துள்ளார்கள் என்பது தெரிந்துவிடும் என்பதற்காக போலீசாரை வைத்து தடுப்பா?”

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கச் சென்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொந்தளித்த தமிழிசை

அனுமதி இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கூறி, போலீசார் அவரை தடுத்த நிலையில், அவர்களுடன் தமிழிசை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியே ஒரு போர்க்களம் போல மாறிப் போனது. காவல்துறையினர் தன்னை தடுத்த நிலையில், ‘தான் அமைதியாக பொதுமக்களை சந்திக்க வந்தது உங்களுக்கு பிரச்னையா? மக்களே தானாக வந்து மும்மொழிக் கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து இட வருகிறார்கள். அதை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?’ என்று கேள்விக்கு மேல் கேள்வியை தமிழிசை காவல்துறையினரை நோக்கி வைத்தார்.

சுத்துப்போட்ட போலீசார், அசாராத தமிழிசை

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக தமிழிசையை சுற்றி வளையம் அமைத்த பெண் போலீசார் அவரை எங்கும் செல்லவிடாமல் விடாப்படியாக தடுத்து நிறுத்தினர். ஆனால், அதற்கெல்லாம் அசாரத தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதம் செய்து, தன்னை கையெழுத்து இயக்கம் நடத்தவிடுமாறும் தன்னை தடுப்பதற்கு என்ன காரணம் ? என்றும் அடுக்கட்டுக்கான கேள்விகளை கேட்டு அவர்களை திணறடித்தார்.

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின்படி தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என கூறி ஒரு கோடி பேர் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இன்று, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கம் அருகே மக்களிடம் மும்மொழி கொள்கையைவ் வலியுறுத்தி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தொடர்ந்தார். ஆனால், காவல்துறை அனுமதி இல்லாமல், கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கூறி அவரை போலீசார் தடுத்தனர். 

முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவினர், தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் மூத்த தலைவர் மட்டுமல்ல 2 மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்தவர். ஆனால், அவரையே காவல்துறையினர் ஒரு சாதாரண கையெழுத்து இயக்கத்தை கூட நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவது எனன் நியாயம் என்றும் கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றால், தமிழக மக்கள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இருப்பது தெரிந்துவிடும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget