மேலும் அறிய

Coronavirus Vaccine Shortage: தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி இல்லாததால் செலுத்த வரும் மக்கள், ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தவிர்க்கும் வகையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது.  இதில் கோ-வேக்சின், கோவிட் ஷீல்டு என 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பின்னர்  45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள், 60 வயதிற்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதையடுத்து தற்போது  18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. 


Coronavirus Vaccine Shortage: தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்திலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது  திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு தலைமை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தடுப்பூசி செலுத்தும் பணி மருந்துகள் இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாமல் காணப்பட்ட நிலையில்,  புதியதாக  தமிழக அரசு பொறுப்பை ஏற்றவுடன் பல்வேறு விழிப்புணர்வுகளை  கிராமங்களில் மற்றும் நகரங்களில்  ஏற்படுத்தியதின் அடிப்படையில்,மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்ட தொடங்கினர். 

இந்த நிலையில் தடுப்பூசி மருந்து கையிருப்பு தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் தீர்ந்ததால் கடந்த இரண்டு நாட்களாக  தடுப்பூசி போடும் பணியானது தற்காலிகமாக  நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக 2 டோஸ் மருந்துகளும் தீர்ந்து விட்டதால் பொதுமக்கள் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றும் இடங்களுக்கு வருகை தரும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல்  ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் 

 


Coronavirus Vaccine Shortage: தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மக்கள்!

 

இது குறித்து அதிகாரிகள் அலைபேசியில் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 80-ல் இருந்து 100 வரை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதாகவும்,  ஆரம்பத்தில் குறைந்த அளவிலான மக்களே வந்த தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தற்போது பொது மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர் என்றும் 24 லட்சம் பேர் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


Coronavirus Vaccine Shortage: தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் மக்கள்!

சமூக ஆர்வலர்கள் கார்த்திகேயன் தெரிவிக்கையில் தினந்தொரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் தண்டோரா மூலமாகவும் ஒளி பெருக்கி போன்றவற்றின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசியை பொதுமக்கள் தற்போது அதிகமாகவும் ஆர்வமாகவும் போட்டுக்கொண்டு வரும் இச்சூழலில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழக மக்களை வஞ்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டும்  மக்கள் தற்பொழுது விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நிலையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget