மேலும் அறிய

சென்னை ; மசாஜ் சென்டரில் அதிர்ச்சி !! பாலியல் தொழில் கைது !! பரபரப்பு தகவல்

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது. 6 பெண்கள் மீட்பு. 1 செல்போன் பறிமுதல்

சென்னை ; மசாஜ் சென்டரில் அதிர்ச்சி !! பாலியல் தொழில் கைது !! பரபரப்பு தகவல்

சென்னை கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , கோடம்பாக்கம் வரதராஜபேட்டை மெயின் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரை கண்காணித்த போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரை மாவட்டம் தினமணி நகரை சேர்ந்த சுமதி ( வயது 29 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன், Swiping Machine-1, ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் சுமதி அவரது பெண் தோழியுடன் சேர்ந்து இடத்தை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்ததும் சுமதி மீது பாலியல் தொழில் செய்தது தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட சுமதி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 6 பெண்களும் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள தலைமறைவான நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம் மையத்தில் பணம் டெபாசிட் செய்து கொண்டிருந்த நபரை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது. ரூ.8 லட்சம் அடங்கிய பணப்பை மீட்பு.  1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சையது முகமது ( வயது 31 ) என்பவர் கடந்த 24 ம் தேதி மாலை நேரத்தில் பையில் ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு அபிராமபுரம், சிருங்கேரி மடம் சாலையில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்று அங்கு உள்ள டெபாசிட் இயந்திரத்தில் அவரது நண்பர்களின், வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து கொண்டிருந்த போது, அங்கு தலைக் கவசம் அணிந்து வந்த 2 நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி மேற்படி சையது முகமது டெபாசிட் செய்தது போக மீதமிருந்த சுமார் ரூ.8,09,500 அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து சையது முகமது அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜா ( வயது 24 )  என்பவரை 25 ம் தேதி கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ. 8 லட்சம் அடங்கிய பணப்பை மீட்கப்பட்டு குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 அரிவாள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பாண்டியராஜா மீது ஏற்கனவே கோயம்பேடு மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையத்தில் 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. 

கைது செய்யப்பட்ட பாண்டியராஜா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு நபர்களை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget