மேலும் அறிய

பயத்தில் பிரதமர் மோடி உளறுகிறார் - பிரதமரை விளாசும் செல்வப்பெருந்தகை

Selvaperunthagai : பிரதமர் மோடி அமலாகத்துறை வருமான வரித்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை நம்பி தேர்தலில் நிற்கிறார். எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

வயநாட்டில் ஐந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது : கேரள மாநிலம் வயநாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வந்துள்ளோம். கடந்த முறை வயநாட்டு தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இம்முறை ஐந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பாசிச சக்திகளை ஒழிக்க வயநாட்டில் இருந்து ஒரு தீப்பொறி கிளம்பி இருக்கிறது.

அனைவருக்கும்  - சம உரிமை

தோல்வி அச்சத்தில் பிரதமர் என்கிற தகுதியை மீறி மிகவும் கீழ்த்தரமாக மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் பாசிசவாதியாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மகாத்மா காந்தி இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த போது இந்த மண்ணில் பிறக்கும் அனைவருக்கும், சம உரிமை இருக்கிறது எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகள் எனக் கூறினார். ஆனால் பிரதமர் மோடி மக்களை பிரித்தாலும் கொள்கையில் இறங்கியுள்ளார்.

தோல்வி பயத்தில் பாஜக 

நாங்கள் கூட இந்துதான். ஆனால் அவர் கூறுவதை ரசிக்கவில்லை எதிர்க்கிறோம். இப்படிப்பட்ட பாசிச சக்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என தேசத்தின் மக்கள் எல்லாம் புரிந்து கொண்டுள்ளனர். மிகப்பெரிய தோல்வி பயத்தில் பாஜக உள்ளது, 100 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது என ஊடகங்கள் பேசிக் கொள்கிறது. தோல்வி பயத்தில் மக்களிடையே மோதலை உருவாக்க மோடி இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுகளை பேசி வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

எந்த புகார் மீதும் நடவடிக்கை இல்லை

பாஜகவில் உள்ள அமைச்சர் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தோல்வி பயத்தால் மாநிலங்களவை உறுப்பினரான பாஜகவில் எத்தனையோ மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சராக இருக்கிறார்கள். முதலில் இவர்கள் எல்லாம் தோல்வி பயத்தில் மக்களை சந்திக்காமல் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்களா என கேட்க வேண்டும். இந்தியா கூட்டணி மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆனால் பிரதமர் மோடி அமலாகத்துறை வருமான வரித்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை நம்பி தேர்தலில் நிற்கிறது. அதனால் அவர்கள் மீது எந்த புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

சமமான ஆட்சி நடக்கவில்லை

குறிப்பாக தேர்தலுக்கு முன்பாக திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை அமலாக்கத்துறை விழிக்காமல் கும்பகர்ணன் போன்று தூங்கிக் கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை என்ன செய்தது சிபிஐ என்ன செய்தது. பாசிச ஆட்சியில் எல்லோருக்கும் சமமான ஆட்சி நடக்கவில்லை. காலை நேரத்தில் சோதனை நடத்தி மாலை நேரத்தில் பாஜகவின் கணக்கில் பணம் போய்விடும் இதுதான் தேர்தல் நன்கொடை பத்திரம். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget