மேலும் அறிய

Pongal Bus: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா..? அப்போ கிளாம்பாக்கத்துல இருந்து கிளம்புங்க..!

மூன்று நாட்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்காலிகமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

படையெடுக்கும் மக்கள்
 
தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. சென்னை புறநகர் பகுதிகளும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டி கிடப்பதால், பிழைப்பிற்காக தென் மாவட்டத்திலிருந்து, ஏராளமான மக்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதேபோன்று வட மாவட்டத்தை சேர்ந்த பலரும் சென்னை புறநகர் பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் சமயங்களில் இவ்வாறு தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி செல்வது வழக்கம். 
 

Pongal Bus: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா..? அப்போ கிளாம்பாக்கத்துல இருந்து கிளம்புங்க..!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
 
இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தை 1 ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளதால் சென்னையில் 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக வேகமாக தயாராகி வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், முன்பதிவு செய்யப்படும் விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Pongal Bus: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா..? அப்போ கிளாம்பாக்கத்துல இருந்து கிளம்புங்க..!
அரசு விரைவு பேருந்து
 
அரசு பேருந்துகளில் செல்வதற்கு ஆன்லைனிலும், நேரிலும் முன்பதிவு செய்தவர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாம்பரம், பெருங்களத்துார், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொத்தேரி, படப்பை,  ஸ்ரீபெரும்புதுார், கேளம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் வரை செல்லாமல்,  கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் குறித்த நேரத்திற்கு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கு பயணியரை ஏற்றிச் செல்லும்.
 
திருச்சி, விழுப்புரம், கடலுார், திண்டுக்கல், மதுரை, தேனி ,பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, துாத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு அதிவிரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணியரை ஏற்றி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற பகுதியில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைய, கிளாம்பாக்கம் வழியே செல்லக்கூடிய மாநகர பேருந்துகள் ,கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
 
கழிப்பறை வசதி
 
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி கழிவறை மற்றும் மருத்துவ குழு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்பதிவு செய்யாதவர்களும், இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும், உதவி மேலாளர் அறையில் தொடர்பு கொண்டு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்தில் காலி இருக்கைகள் இருந்தால், அதை பதிவுசெய்து செல்லாலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget