மேலும் அறிய

உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடைபெற்ற விபத்து தொடர்பாக ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் தொகுப்பேடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியானார்கள். பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது தொழுப்பேடு அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
 
உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
 இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் உயிரிழந்த ஆறு பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாயும் சிகிச்சை பெற்று வரும் பத்து நபர்களுக்கு தல ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தார்.
 
விபத்து நடந்தது எப்படி
 
 
சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது, அதற்கு முன் லாரி சென்றுள்ளது. இதேபோல மற்றொரு பேருந்தும், பேருந்துக்கும் முன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அரசு பேருந்து இரண்டு வாகனத்தையும், முந்த முயற்சி செய்ய முயன்ற போது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 
உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
விபத்து குறித்து விசாரணை
 
 
விபத்து குறித்து அச்சரப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சௌந்தர்யா (23) , குரோஷா (43) இரண்டு பெண்கள் மற்றும் மணிகண்டன் (53) வெங்கடேசன் (38) , ஏகாம்பரம் ( 36)  , மகேந்திரன் ( 43) ஆகிய ஆறு பேர் உயிரிழந்தனர் என விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் பெற்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் (50) என்பவர் உயிரிழந்தார். 

உயிரிழப்பு அதிகரிப்பு: அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்... நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
 
ஓட்டுநர் கைது
 
தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த லாரி மற்றும் மற்றொரு பேருந்து ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பேருந்து ஓட்டுனர், முந்த முயன்ற காரணத்தினாலே இந்த விபத்து நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஓட்டுனரின், இந்த செயல் காரணமாகவே விபத்து ஏற்பட்டு, 7 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்தது என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வடலூர் டிப்போவில் பணிபுரிந்து வந்த, கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். முரளி மீது 279, 377 , 304 ஆகிய மூன்று சட்டப் பிரிவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Tata Punch vs Hyundai Exter: டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
Life Insurance Tips: மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Embed widget