மேலும் அறிய

போலீஸ் காவலில் மரணமடைந்த விக்னேஷ் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

சென்னை வாலிபர் விக்னேஷ், போலீஸ் காவலில் மரணமடைந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி 

சென்னை வாலிபர் விக்னேஷ், போலீஸ் காவலில் மரணமடைந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ்  என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். 
 
போலீஸ் விசாரணையில் அவர் மரணம் அடைந்தது தொடர்பாக கொலை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார்,  சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோரை  கைது செய்தனர்.
 
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்பதால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி விக்னேஷின் சகோதரர் வினோத் மற்றும் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
 
இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், காவல் ஆய்வாளர் மோகந்தாஸ் என்பவர் மனுதாரர்கள் வீட்டுக்கு வந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுத்து வழக்கை முடிக்க முயற்சித்ததால், விசாரணை நியாயமாக நடக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளதாகவும், வழக்கில் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.
 
ஆனால், விசாரணை முறையாக, பாரபட்சமற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும், 84 சாட்சிகளிடம் விசாரித்து 15 கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆதாரங்கள்  சேகரிக்கப்பட்டு, விசாரணை முடிவடையும் நிலையில் இருப்பதாகவும் கூறி, சிபிஐ விசாரணைக்கு மாற்ற கூடாது என சிபிசிஐடி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் புலன் விசாரணை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்வதில் சம்பவம் தொடர்பாக 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளது, நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது, சம்பவ இடத்திலிருந்து  ரத்தக்கரை படிந்த இரும்பு கம்பி மற்றும் லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதில் இருந்து சிபிசிஐடி பாரபட்சமான முறையில் விசாரணை நடத்துவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை நீதிபதி சிவஞானம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" வீடியோ வெளியிடுவோம் " சிறுமி பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய அசாம் இளைஞர்கள்
திருமணத்தை மீறிய உறவு !! மது அருந்திய பெண்கள் !! இறுதியில் நடந்த சம்பவம்
திருமணத்தை மீறிய உறவு !! மது அருந்திய பெண்கள் !! இறுதியில் நடந்த சம்பவம்
" மனைவியை கொன்று விட்டேன் " உறவினர்களின் Whats App குழுவில் வீடியோ வெளியிட்ட கணவன்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கால்பந்து பயிற்சியாளர் !! இறுதியில் நடந்த விபரீதம்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கால்பந்து பயிற்சியாளர் !! இறுதியில் நடந்த விபரீதம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: தேர்தல் ஆணையம் போட்ட ரூல்ஸ்.. உணவு, கார், தேங்காய், சேர், சேலை - எதுக்கு எவ்வளவு செலவு?
TN Election 2026: தேர்தல் ஆணையம் போட்ட ரூல்ஸ்.. உணவு, கார், தேங்காய், சேர், சேலை - எதுக்கு எவ்வளவு செலவு?
Pan Card: பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
Pan Card: பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
TN Election: தமிழ்நாட்டில் கடைசியாக சுயேச்சை வேட்பாளர் வென்றது எப்போது? மேஜிக் நடந்தது எப்படி? டிடிவி ஆ?
TN Election: தமிழ்நாட்டில் கடைசியாக சுயேச்சை வேட்பாளர் வென்றது எப்போது? மேஜிக் நடந்தது எப்படி? டிடிவி ஆ?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
Embed widget