சென்னை ; சாட்சி சொல்லக் கூடாது என கத்தியால் மிரட்டல் !! கொலை வழக்கில் பரபரப்பு
சென்னை புளியந்தோப்பில் கொலை வழக்கில் , சாட்சி சொல்லக் கூடாது என பெண்ணை மிரட்டிய ரவுடி கைது

கட்டையால் அடித்து கொலை
சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் வசித்து வருபவர் அன்புக் கரசி ( வயது 65 ) இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2024 ஆம் வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி இவரது பெட்டிக் கடை அருகே பாஸ்கரன் என்பவரை ராஜா என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்தார்.
சாட்சி சொல்ல கூடாது - கத்தியை காட்டி மிரட்டல்
இதனை நேரில் பார்த்த சாட்சியாக அன்புக் கரசி சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அன்புக் கரசியின் பெட்டி கடைக்கு வந்த ராஜா குடி போதையில் பாஸ்கர் கொலை வழக்கில் நீ எனக்கு எதிராக சாட்சி சொல்ல கூடாது என கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.
இதனால் அதிர்ச்சி அடை ந்த அன்புக்கரசி இது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பேசின்பிரிட்ஜ் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வந்த நிலையில் புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே ராஜா என்கின்ற காட்டு ராஜா ( வயது 39 ) என்ற நபரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் ( வயது 58 ) கட்டிட மேஸ்திரி. இவர் மாதவரம் ஹவுசிங் செக்டர் பகுதியில் உள்ள காலி இடத்தில் சுற்று சுவர் கட்டுவதற்காக காண்ட்ராக்ட் எடுத்து பணிகள் மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் 3 வட மாநில கட்டிட தொழிலாளர்கள் 10 அடி உயரம் கொண்ட பழைய சுற்று சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பழைய சுற்று சுவர் எதிர்பாராத விதமாக திடீரென்று இடிந்து கீழே விழுந்தது. இதில் பிஹாரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி குல்தீப் சௌதாகி ( வயது 48 ) என்பவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தலை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த வரை மீட்டு ஆம்புலன்ஸ் ஏற்றி சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த குல்தீப் சௌதாகியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.























