மேலும் அறிய

Nirmala Devi Case:நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு - நாளை வெளியாகிறது தண்டனை விவரம்!

Nirmala Devi Case: கல்லூரி மாணவர்களை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

கல்லூரி மாணவர்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், அவரது தண்டனை விவரம் நாளை (30.04.2-2024) வெளியாக உள்ளது.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி, மாணவைகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் விசாரணை நிறைபெற்றுள்ல நிலையில், இந்த வழக்கில்  நீதிபதி பகவதி அம்மாள் இன்று (29.04.2024) தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கின்  தீர்ப்பு கடந்த வாரம் 26-ம் தேதி வழங்கப்பட இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக நிர்மலா தேவி தவிர பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்ப சாமி ஆகியோர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அதனால், வழக்கின் தீர்வு இன்று வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி: 

அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியர் நிர்மலா தேவி (52).  இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது. நிர்மலா தேவியால் குறிவைக்கப்பட்ட மாணவிகள் சிலர், நிர்மலாதேவி பேசியதை பதிவு செய்து பெற்றோர்கள் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் புகார்செய்தனர். பெற்றொர்கள் கொடுத்த இந்த புகாரை கல்லூரி நிர்வாகம் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய அலைப்பேசி உரையாடல், சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை கைது செய்யக் கோரி போராட்டம் தொடர்ந்தது. அதையடுத்து, நிர்மலாதேவி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார். மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் 2018, ஏப். 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல் துறையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் பல்கலைக்கழக உதவிப் பேராசியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் இந்த வழக்கில் கைது செய்தனர் காவல்துறையினர்.  இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு,  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இந்நிலையில் பேராசிரியர் நிர்மலாதேவி உட்பட 3 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானபோது,  பேராசியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இரண்டு பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். 
 5 பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரம் நாளை (ஏப்.30,2024) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai Metro Rail: சென்னை மெட்ரோவுக்கு குறையாத மவுசு! பிப்ரவரி மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா?
Chennai Metro Rail: சென்னை மெட்ரோவுக்கு குறையாத மவுசு! பிப்ரவரி மாதத்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா?
மாநகராட்சி ஒப்பந்தங்களில் ரூ. 6 லட்சம் கோடி ஊழலா? - அன்புமணி இராமதாஸ் அதிரடி அறிக்கை!
மாநகராட்சி ஒப்பந்தங்களில் ரூ. 6 லட்சம் கோடி ஊழலா? - அன்புமணி இராமதாஸ் அதிரடி அறிக்கை!
சென்னை விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் பயணிகள் கடும் அவதி!
சென்னை விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் பயணிகள் கடும் அவதி!
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Embed widget