மேலும் அறிய

Chennai Rain: ”30 செ.மீ மழை பெய்தும் சென்னையில் பாதிப்பு இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Chennai Rain: 30 செ.மீ மழை பெய்தும் சென்னையில் எந்த பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Chennai Rain: 30 செ.மீ மழை பெய்தும் சென்னையில் எந்த பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார். சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி மன்ற மண்டல குழு தலைவர் கிருஷ்ணா மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் பெரிய அளவு மலை பெய்தும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறினார்.

கடந்த ஆண்டுகளில் பெய்த கனமழையால் சாலைகளில் அதிக அளவு மழை நீர் தேங்கியிருந்தது. ஆனால் இந்த ஆண்டுகளில் 30 செ.மீ மழை பெய்தும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் ரூபாய் 710 கோடி செலவில் 157 கிலோ மீட்டர் பணிகள் முடிந்துள்ளது என தெரிவித்தார். முதலமைச்சர் நேரடியாக பணிகள் நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு மொற்கொண்டு பணிகள் விரைவாக முடிவடைந்துள்ளது.

சென்னையின் ஒரு சில இடங்களில் மட்டும் மலை நீர் தேங்குகிறது. மழைநீர் தேங்கிய இடங்களில் அதனை அகற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அதிக அளவு நீர் தேங்கியதால் 1,200 மோட்டர் பம்புகள் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு சாலைகளில் தேங்கிய நீரை அகற்ற  400 மோட்டர் பம்புகள் பயன்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.

”ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கவில்லை”

சென்னையில் உள்ள ராஜ மன்னார் சாலையில், பி.டி.ராஜன் சாலைகளில் புதிய மழைநீர் வடிகால் அமைத்தது காரணமாக நீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு பெய்த மழையால் சென்னையில் 16 சுரங்கப் பாதையில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு 16 சுரங்கப் பாதைகளில் அதிநவீன மோட்டர் வைத்து ஏர்படுகள் செய்ததால்  நீர் தேங்கவில்லை என தெரிவித்தார். சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பாதிக்கபட்டது போன்று, இந்த ஆண்டு பாதிக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, சென்னையில்  30 செ.மீ மழை பெய்தும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை எனவும் மேடவாக்கம், புழுதிவாக்கம், கல்லுக் குட்டை உள்ளிட்ட இடங்களில் எந்த பாதிப்பு இல்லை என தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முடிந்த ஒரே நாளில் 200 முகாம்கள் மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Embed widget