மேலும் அறிய

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

தமிழகம் முழுவதுமே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழக அரசு தடை செய்துள்ளதுள்ள நிலையிலும் மறைமுகமாக பல இடங்களில் இந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக அவ்வப்பொழுது  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும்,பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
இந்நிலையில் கோவில் நகரமானதும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கின்ற  காஞ்சிபுரம் மாநகராட்சியை பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக முழுமையாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தான் காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி உத்தரவின்படியும், காஞ்சிபுரம். மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரிலும், மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், குமார், முகமது இக்பால், லட்சுமி பிரியா உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் இன்று காஞ்சிபுரம்  மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம், செங்கழுநீரோடை வீதி,மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள பூக்கடைகள், சாலையோர கடைகள், மளிகை கடைகளில்  என பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த திடீர் ஆய்வை  மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
இந்த ஆய்வின் போது  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய சுமார் 75 கிலோ பிளால்டிக் பைகளை பறிமுதல் செய்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக சுமார் 11,000 ரூபாய் அபராதத்தையும் விதித்தனர். இந்த அபராதம் விதிப்பை வழக்கம் போல் கைகளால் எழுதி கொடுக்கும் சீட்டு முறையை தவிர்த்து டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் முறையினை பின்பற்றி கையடக்க டிஜிட்டல் இயந்திரம் மூலம் அபராதம் சீட்டினை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வழங்கினர்.
 
இதனால் அபராதம் வசூலிக்கும் தொகையில் எவ்விதமாக தவறுகளும் ஏற்படாமல் வெளிப்படை தன்மையாக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
மேலும் கடை உரிமையாளர்களிடம் இனி வருங்காலங்களில் எப்போதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.
 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

TN Weather Update: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்
" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்
" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Suzuki Burgman Street Review: 56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Embed widget