மேலும் அறிய

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

தமிழகம் முழுவதுமே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தமிழக அரசு தடை செய்துள்ளதுள்ள நிலையிலும் மறைமுகமாக பல இடங்களில் இந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக அவ்வப்பொழுது  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும்,பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
இந்நிலையில் கோவில் நகரமானதும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கின்ற  காஞ்சிபுரம் மாநகராட்சியை பிளாஸ்டிக் இல்லா மாநகரமாக முழுமையாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தான் காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தரம் உயர்த்தப்பட்டதிலிருந்து மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி உத்தரவின்படியும், காஞ்சிபுரம். மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தலின் பேரிலும், மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், குமார், முகமது இக்பால், லட்சுமி பிரியா உள்பட 10 பேர் கொண்ட குழுவினர் இன்று காஞ்சிபுரம்  மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடைசத்திரம், செங்கழுநீரோடை வீதி,மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள பூக்கடைகள், சாலையோர கடைகள், மளிகை கடைகளில்  என பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த திடீர் ஆய்வை  மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
இந்த ஆய்வின் போது  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய சுமார் 75 கிலோ பிளால்டிக் பைகளை பறிமுதல் செய்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக சுமார் 11,000 ரூபாய் அபராதத்தையும் விதித்தனர். இந்த அபராதம் விதிப்பை வழக்கம் போல் கைகளால் எழுதி கொடுக்கும் சீட்டு முறையை தவிர்த்து டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் முறையினை பின்பற்றி கையடக்க டிஜிட்டல் இயந்திரம் மூலம் அபராதம் சீட்டினை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் வழங்கினர்.
 
இதனால் அபராதம் வசூலிக்கும் தொகையில் எவ்விதமாக தவறுகளும் ஏற்படாமல் வெளிப்படை தன்மையாக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம்: அதிகரிக்கும் பிளாஸ்டிக்: அபராதத்திற்கு டிஜிட்டல் முறையை கையில் எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம்
 
மேலும் கடை உரிமையாளர்களிடம் இனி வருங்காலங்களில் எப்போதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.
 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் ‘சிப் மையம்’! 5,000 பேருக்கு பயிற்சி! செமிகண்டக்டர் துறையில் புதிய சாதனை!
தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் சிப் மையம்! 5,000 பேருக்கு பயிற்சி! செமிகண்டக்டர் துறையில் சாதனை!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Chennai Metro Phase 2: சென்னை மெட்ரோ 2-ம் கட்டம்! ரூ.2,000 கோடி நிதி உதவி! ஆளில்லா ரயில் எப்போது?
Chennai Metro Phase 2: சென்னை மெட்ரோ 2-ம் கட்டம்! ரூ.2,000 கோடி நிதி உதவி! ஆளில்லா ரயில் எப்போது?
காட்டாங்குளத்தூர் சிக்னலில் நள்ளிரவு பயங்கர விபத்து! அமைச்சர் காரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!
காட்டாங்குளத்தூர் சிக்னலில் நள்ளிரவு பயங்கர விபத்து! அமைச்சர் காரில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் நச்சுக்காற்றால் 4 ஆண்டுகள் ஆயுள் குறைகிறது: சௌமியா அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
2.50 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Bolero Neo முதல் Scorpio N வரை - Mahindra சூப்பர் ஆஃபர்!
2.50 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Bolero Neo முதல் Scorpio N வரை - Mahindra சூப்பர் ஆஃபர்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget