மேலும் அறிய

ஏகாம்பரநாதர் கோயிலில் காணாமல்போன மண்டபம் குறித்து சிலைக்கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் ஆய்வு...!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இரட்டை திருமாளிகை சீரமைப்பு நிதியில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவில் செயல் அலுவலர் உடன் விசாரணை நடத்தினர்

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த கோயிலாக விளங்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலானது பஞ்சபூத தலங்களுள் இதுவும் ஒன்று. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலை முற்கால சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர பேரரசுகளை சேர்ந்த பல்வேறு அரசர்கள் பல்வேறு கட்டுமானங்களை ஏற்படுத்தி வழிப்பட்டுள்ளனர். பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோயிலுக்கு சொந்தமாக என்னெற்ற நகைகளும், சுவாமி சிலைகளும், பல்வேறு இடங்களில் ஏராளமான நிலங்களும் உள்ளன. இந்த நகைகள், நிலங்கள், சுவாமி சிலைகளை பராமரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. 

ஏகாம்பரநாதர் கோயிலில் காணாமல்போன மண்டபம் குறித்து சிலைக்கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் ஆய்வு...!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள பழமையான இரட்டை திருமாளிகை மண்டபமானது மன்னர்கள் காலத்தில், மன்னர் குடும்பத்தினர் சுவாமியை தரிசனம் செய்வதற்காக கட்டப்பட்டது. அரிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட இந்த இரட்டை  திருமாளிகை மண்டபம் ஆனது காலப்போக்கில் சிதிலம் அடைந்து பல ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து விழுந்தது. சிதலமடைந்த இரட்டை திருமாளிகை மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 


ஏகாம்பரநாதர் கோயிலில் காணாமல்போன மண்டபம் குறித்து சிலைக்கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் ஆய்வு...!
சிதமலமைடந்த இரட்டை திருமாளிகை மண்டபத்தை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து, அதற்கு, முறையான திட்ட மதிப்பீட்டை தயார் செய்யாமலேயே கடந்த 2014 - 15 ஆம் ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பணியை துவக்கினர்.  இதனைத் தொடர்ந்து மேல் தள சீரமைப்பிற்கு, 79 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சிதலமடைந்திருந்த இரட்டை திருமாளிகை மண்டபத்தில் இருந்த சிற்பங்கள் நிறைந்த பழைய கல்துாண்களை காணவில்லை என்ற புகார் எழுந்தது.

இதனால் காணாமல் போன தூண்கள் குறித்து விசாரிக்க கோரியும், சீரமைப்பு பணிகளுக்கான நிதி செலவுக்கு விளக்கம் கேட்டும் காஞ்சிபுரத்தை சேர்ந்த  டில்லிபாபு என்பவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்து சமய  அறநிலைத்துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்க்கு தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


ஏகாம்பரநாதர் கோயிலில் காணாமல்போன மண்டபம் குறித்து சிலைக்கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் ஆய்வு...!

இந்நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் செயல் அலுவலர் தியாகராஜன் கும்பகோணத்தில் இருந்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தலைமையில் போலீசார் செயல் அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு இரட்டை திருமாளிகையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தொன்மையான கல் தூண்கள் காணாமல்போனது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஏகாம்பரநாதர் கோயிலில் காணாமல்போன மண்டபம் குறித்து சிலைக்கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் ஆய்வு...!

கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள்

கடந்த ஜூன் மாதம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையில் ஆவணங்களில் வராத பல சிலைகள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் புதியதாக 16 உற்சவர் சிலைகள் இருப்பது கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. சில  ஊழியர்கள் நடத்திய ஆய்வில் விநாயகர், லட்சுமி,  9 நாயன்மார்கள் உள்ளிட்ட 16 சிலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் தோஷம்... அவசரக்கல்யாணம்... வரதட்சணை கொடுமை: புதுமணப்பெண் தற்கொலை!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget