மேலும் அறிய

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் மாணவ மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று பாடங்களை எடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது அதன்பின், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது இதனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத காரணத்தினால் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் திறந்த பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது இதன் பின் மாணவர்களுக்கு நடக்கும் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படாமலே   அனைத்து மாணவ மாணவிகளும் "ஆல்பாஸ்" என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!
தற்போது 2021-22 கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் கடந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் நிலையே தொடர்கிறது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் அரசு பள்ளி மாணவர்களால் பொருளாதார சூழ்நிலை காரணமாக  ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்ல இதனால் மாணவ -மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவ மாணவிகளுக்கு பாடங்களை எடுத்து கல்வி பயில வழி செய்து வருகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் மாணவர்களின் கல்வி கெட்டுவிடக்கூடாது என கடலூர் ஊராட்சி ஒன்றியம் களையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களுக்கு கூரைவீட்டு திண்ணையில் பாடம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அந்த பள்ளி ஆசிரியர்கள் ஊரில் உள்ள மாணவர்களை ஒன்று திரட்டி அந்த ஊரில் உள்ள ஒரு நீண்ட கூரை வீட்டு திண்ணையில் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஊரில் உள்ள மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாக அந்த பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் அதுமட்டுமின்றி மாணவ மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் குழுக்களை ஏற்படுத்தி சந்தேகங்களையும் மாணவ மாணவிகளின் ஆசிரியர்கள் தீர்த்து வருகின்றனர். இவ்வாறு செய்வதனால் மாணவர்களுக்கு மிகவும் பயன்படுவதாக பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களாக மாறிவரும் வீட்டுத்திண்ணைகள்...!

தமிழகத்தில் தொடர்ந்து கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் மாணவ மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று பாடங்களை எடுத்து வருகின்றனர். மாணவ மாணவிகளின் கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களின் இது போன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. இன்னும் கொரோனா பரவல் முடிவுக்கு வராத நிலையில் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Embed widget