மேலும் அறிய

Chennai Outer Ring Road: அடுத்த இடி - தனியார் வசமாகும் சென்னை அவுட்டர் ரிங் ரோட் - 25 வருடத்திற்கு கப்பம் கட்டணுமாம்

Chennai Outer Ring Road: சென்னை அவுட்டர் ரிங் ரோடை அடுத்த 25 வருடங்களுக்கு தனியார்வசமாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Chennai Outer Ring Road: சென்னை அவுட்டர் ரிங் ரோடிலும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியார் சுங்கக் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை அவுட்டர் ரிங் ரோடிற்கும் சுங்கக் கட்டணம்:

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, புறநகரில் ரிங் ரோட் அமைக்கப்பட்டது. வண்டலூரில் தொடங்கி மீஞ்சூர் வரையிலான இந்த சுமார் 62 கிலோ மீட்டர் சாலையானது, பிரதான தேசிய நெடுஞ்சாலைகளான NH4 (நஸ்ரத்பேட்டை), NH205 நெமிலிச்சேரி (நஸ்ரத்பேட்டை) மற்றும் NH5 (நல்லூர்) ஆகியவற்றையும் இணைக்கிறது. இந்நிலையில் தான், இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், அடுத்த 25 ஆண்டுகளுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு வழிச்சாலையில் அரசு மற்றும் தனியார் கூட்டு நிர்வாகத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு அரசு டெண்டர்களையும் வெளியிட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு தனியார் வசம்:

மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை நிர்வாகமானது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் Toll Operate Transfer (TOT) எனும் முன்மாதிரியை ஏற்று, சாலைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது. தெற்கில் வண்டலூர் தொடங்கி வடக்கே மீஞ்சூர் வரையிலான இந்த சாலையை, மக்கள் வரிப்பணமான 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு கட்டமைத்தது.

இந்நிலையில் மாநில அரசின் சொத்தை பணமாக்குதல் திட்டட்தின் கீழ், அந்த சாலை 2000 கோடி ரூபாய் மதிப்பிற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, TOT திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் மொத்த தொகையையும் முன்பணமாக கொடுத்துவிட்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவுட்டர் ரிங் ரோடில் பயணிக்கும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம்.

கட்டணம் வசூலிப்பது ஏன்?

எதிர்கால உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான மூலதனத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையாகவே, இந்த சுங்கக் கட்டண திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக சென்னை அவுட்டர் ரிங் ரோடில் ஏற்கனவே வரதராஜபுரம், கொலப்பன்சேரி, பலவேடு மற்றும் சின்னமுலைவாயல் ஆகிய நான்கு இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. புதிய டெண்டரின்படி, 2050ம் ஆண்டு வரை இனி அவை தனியாரின் கீழ் செயல்பட உள்ளன. 

நோக்கமும்.. விமர்சனங்களும்..

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து கட்டப்பட்ட சாலையை பயன்படுத்த, நீண்ட காலத்திற்கு சுங்க வரி வசூலிப்பது எப்படி நியாயமாகும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே வரி செலுத்துவோரால் செலுத்தப்பட்ட பணத்தை கொண்டு கட்டப்பட்ட சாலைக்கு, மீண்டும் ஏன் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசுக்கு, மாநில நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் மக்களின் மீது வரிச்சுமையை தான் ஏற்படுத்தும் என்பது தெரியவில்லையா? என லாரி உரிமையாளர்கள் கேள்வி எழ்ய்ப்புகின்றனர்.

அவுட்டர் ரிங் ரோடில் போக்குவரத்து

சென்னை அவுட்டர் ரிங் ரோடில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையானது காலப்போக்கில் மேலும் மேலும் உயரும் என டெண்டர் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தினசரி சுமார் 20 ஆயிரம் முதல் 31 ஆயிரம் வாகனங்கள், பல்வேறு சுங்கச்சாவடிகள் வழியாக அந்த சாலையில் பயணித்து வருகின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.5 சதவிகிதம் அளவிற்கு உயரும் என கூறப்படுகிறது. 

2050ம் ஆண்டில் சில பகுதிகளில் ஒருநாளைக்கு சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கக் கூடும். உதாரணமாக தற்போது தினமும் சுமார் 31 ஆயிரம் வாகனங்களை கையாளும் வரதராஜபுரம் சுங்கச்சாவடி, அடுத்த 25 ஆண்டுகளில் தினசரி சுமார் 70 ஆயிரம் வாகனங்களை கையாள வாய்ப்புள்ளது. தற்போது தினசரி 26 ஆயிரம் வாகனங்களை கையாளும் பாலவேடு பிளாசா, அடுத்த 25 ஆண்டுகளில் தினசரி சுமார் 55 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை கையாளலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget