மேலும் அறிய

விநாயகர் தெரியும்; விநாயகி தெரியுமா? - செங்கல்பட்டு அருகே கண்டெடுக்கப்பட்ட 5ஆம் நூற்றாண்டு சிலை

’’நாடு முழுவதும் விநாயகர் வழிபாடு பரவலாக உள்ள நிலையில், தும்பிக்கையுடன் கூடிய விநாயகி என்னும் பெண் தேவியின் சிலை இதுவரை குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளது’’

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்துக்கு முந்தைய விநாயகியின் கல் சிற்பம் ஒன்று இந்திய தொல்லியல் துறை  குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் வழிபாடு பரவலாக உள்ள நிலையில், தும்பிக்கையுடன் கூடிய விநாயகி என்னும் பெண் தேவியின் சிலை இதுவரை குறைவாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் தெரியும்; விநாயகி தெரியுமா? - செங்கல்பட்டு அருகே கண்டெடுக்கப்பட்ட 5ஆம் நூற்றாண்டு  சிலை
 
இந்த விநாயகியின் சிலை கிரானைட் கல்லால் செய்யப்பட்ட 3 அடி உயரம் கொண்ட சிற்பமாகும். இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த எழில் முருகன் அளித்த தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டில் தொல்லியல் ஆய்வு இந்தியத் தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வாளர்கள் முனைவர் இரா.ரமேஷ், மோ.பிரசன்னா மற்றும் தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் ப.த.நாகராஜன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பொழுது . இரண்டு கல்வெட்டுடன் கூடிய இரு சிற்பங்கள் கிடைத்தன அவை பலகைக்கல்லில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் இவ்வூரின் மேட்டுத்தெருவின் தெற்கேயுள்ள நீரோடையின் கரையோரம் காணப்பட்ட முதல் சிற்பமானது விநாயகி என அதன் சிற்ப அமைப்பின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டது.

விநாயகர் தெரியும்; விநாயகி தெரியுமா? - செங்கல்பட்டு அருகே கண்டெடுக்கப்பட்ட 5ஆம் நூற்றாண்டு  சிலை
 
இரண்டாவது சிற்பமானது மேட்டுத்தெருவின் குளக்கரையில் முதல் சிற்பம் போன்று பலகைக்கல்லில் கல்வெட்டுடன் ஓர் சிற்பம் காணப்படுகிறது. அது உள்ளூர் மக்களால் துர்க்கை அம்மன் என அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் சிற்ப அமைதி ஆண் சிற்பக்கூறுகளை கொண்டு காணப்படுகிறது. மேலும் ஓராண்டு பிறகு மீள்ளாய்வு செய்வதற்க்கு ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பொழுது மேலும் ஓர் சிற்பம் விநாயகர் சிலை அருகே கண்டெடுக்கப்பட்டது. 

விநாயகர் தெரியும்; விநாயகி தெரியுமா? - செங்கல்பட்டு அருகே கண்டெடுக்கப்பட்ட 5ஆம் நூற்றாண்டு  சிலை
 
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்சொல்லப்பட்ட இருசிற்பங்களின் சமகாலத்தை சார்ந்த ஓர்சிற்பம் அதே எழுத்தமைதியுடன் காணப்பட்டது. மேலும் அச்சிற்பத்தின் வடிவமைப்பில் லகுலீசர் என உறுதிசெய்யப்பட்டது. இம்மூன்று சிற்பங்களும் கல்வெட்டின்  எழுத்தமைதியின் அடிப்படையிலும் சிற்ப அமைதி அடிப்படையிலும் இவை கி.பி 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டை சார்ந்தது எனலாம். இவை சுமார் 1500 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் காலத்தை சார்ந்தது. "செயம் பட்ட முத்திர வரிகன் மடவதி" என்ற கல்வெட்டு வாசகம் மூன்று சிற்பங்களிலும் காணப்படுகின்றன. அதாவது இவ்வூரைச் சேர்ந்த முத்திர வரிகன் மடவதி என்பவர் தான் பெற்ற வெற்றியின் நினைவாக இச்சிலைகளை செய்து கொடுத்துள்ளார் என அறிய முடிகிறது. இச்சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் தொடர்பாக மேலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget