மேலும் அறிய

மின் கோபுர வழித்தட இழப்பீடு ; விவசாயிகளுக்கு இனி அதிக நிவாரணம் ! தமிழக அரசின் அதிரடி முடிவு

அதிக திறன் உடைய மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க , நிலம் தருவோருக்கான இழப்பீட்டை மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க , நிலம் தருவோருக்கான இழப்பீட்டை மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் அனல் நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் , மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக பல்வேறு இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. விவசாயிகள், தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இந்த மின் கோபுர வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.

நிலத்தின் மேல் மின் வழித்தடம் அமைக்கப்படும் போது , அதன் உரிமையாளருக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 100 சதவீதமும், மேலே செல்லும் கம்பி வழித்தடத்துக்கு, 20 சதவீதமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. திருப்பூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளில் மின் கோபுர வழித்தடம் அமைக்க, அதிக இழப்பீடு கேட்டு சிலர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மின் வழித்தடங்களை அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது ; 

அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீட்டு தொகையை ஏற்காத பட்சத்தில், மாவட்ட வருவாய் துறையினர் பேச்சு நடத்தி, அவர்கள் கேட்கும் தொகை வழங்கப்படுகிறது. தமிழக மின் தேவை அதிகரித்து வரும் சூழலில், அதற்கு ஏற்ப புதிய மின் கோபுர வழித்தட திட்டங்களை செயல் படுத்த வேண்டியுள்ளது.

மத்திய அரசின், பவர் கிரிட் நிறுவனம், மின் வழித்தடங்கள் அமைக்க, வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் இழப்பீடு வழங்குகிறது. இதனால், அதன் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகின்றன.

எனவே, புதிய மின் வழித்தடங்களை விரைவாக அமைக்க, தற்போது வழங்கப்படும் இழப்பீட்டை விட மும்மடங்கு வரை உயர்த்தி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.

NLC புதிய மின் நிலையத்தில் தமிழகத்திற்கு 830 மெகாவாட் ஒதுக்கீடு

சுடலுார் மாவட்டம் நெய்வேலியில் என். எல்.சி., எனப்படும் நிலக்கரி நெய்வேலி நிறுவனம் அமைக்கும் புதிய அனல் மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு 830 மெகா வாட் மின்சாரத்தை, மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் , மத்திய அரசின் என்.எல்.சி., நிறுவனத்திற்கு 3,390 மெகா வாட் திறனில் நான்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 1,730 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதி மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு தரப்படுகிறது.

நெய்வேலியில் தலா 500 மெகாவாட் திறனில், இரு அலகுகள் உடைய இரண்டாம் விரிவாக்க அனல் மின் நிலையத்தை என்.எல்.சி., நிறுவனம் அமைக்க உள்ளது. இதில், உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரத்தில், 830.44 மெகாவாட்டை தமிழகத்திற்கும், 19.56 மெகா வாட்டை புதுச்சேரிக்கும் மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

மீதமுள்ள 150 மெகா வாட் மின்சாரம் எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படாமல் மத்திய அரசிடம் இருக்கும். இந்த மின்சாரத்தை, மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு சுழற்சி அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.

தலைப்பு செய்திகள்

வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
தனியார் பள்ளிகளில் இனிமேல் இவ்வளவு தான் பீஸா? விளம்பர பலகையில் வைக்க கோர்ட் போட்ட உத்தரவு.. முழு விபரம் உள்ளே!
தனியார் பள்ளிகளில் இனிமேல் இவ்வளவு தான் பீஸா? விளம்பர பலகையில் வைக்க கோர்ட் போட்ட உத்தரவு.. முழு விபரம் உள்ளே!
" அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் உடனே வேலை காலி " - பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம்
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Embed widget