மேலும் அறிய

மின் கோபுர வழித்தட இழப்பீடு ; விவசாயிகளுக்கு இனி அதிக நிவாரணம் ! தமிழக அரசின் அதிரடி முடிவு

அதிக திறன் உடைய மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க , நிலம் தருவோருக்கான இழப்பீட்டை மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மின் கோபுர வழித்தடங்கள் அமைக்க , நிலம் தருவோருக்கான இழப்பீட்டை மும்மடங்காக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் அனல் நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் , மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக பல்வேறு இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. விவசாயிகள், தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இந்த மின் கோபுர வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.

நிலத்தின் மேல் மின் வழித்தடம் அமைக்கப்படும் போது , அதன் உரிமையாளருக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 100 சதவீதமும், மேலே செல்லும் கம்பி வழித்தடத்துக்கு, 20 சதவீதமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. திருப்பூர், கோவை, உள்ளிட்ட பகுதிகளில் மின் கோபுர வழித்தடம் அமைக்க, அதிக இழப்பீடு கேட்டு சிலர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மின் வழித்தடங்களை அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது ; 

அரசு நிர்ணயம் செய்துள்ள இழப்பீட்டு தொகையை ஏற்காத பட்சத்தில், மாவட்ட வருவாய் துறையினர் பேச்சு நடத்தி, அவர்கள் கேட்கும் தொகை வழங்கப்படுகிறது. தமிழக மின் தேவை அதிகரித்து வரும் சூழலில், அதற்கு ஏற்ப புதிய மின் கோபுர வழித்தட திட்டங்களை செயல் படுத்த வேண்டியுள்ளது.

மத்திய அரசின், பவர் கிரிட் நிறுவனம், மின் வழித்தடங்கள் அமைக்க, வழிகாட்டி மதிப்பை விட கூடுதல் இழப்பீடு வழங்குகிறது. இதனால், அதன் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகின்றன.

எனவே, புதிய மின் வழித்தடங்களை விரைவாக அமைக்க, தற்போது வழங்கப்படும் இழப்பீட்டை விட மும்மடங்கு வரை உயர்த்தி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.

NLC புதிய மின் நிலையத்தில் தமிழகத்திற்கு 830 மெகாவாட் ஒதுக்கீடு

சுடலுார் மாவட்டம் நெய்வேலியில் என். எல்.சி., எனப்படும் நிலக்கரி நெய்வேலி நிறுவனம் அமைக்கும் புதிய அனல் மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு 830 மெகா வாட் மின்சாரத்தை, மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் , மத்திய அரசின் என்.எல்.சி., நிறுவனத்திற்கு 3,390 மெகா வாட் திறனில் நான்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 1,730 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதி மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு தரப்படுகிறது.

நெய்வேலியில் தலா 500 மெகாவாட் திறனில், இரு அலகுகள் உடைய இரண்டாம் விரிவாக்க அனல் மின் நிலையத்தை என்.எல்.சி., நிறுவனம் அமைக்க உள்ளது. இதில், உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரத்தில், 830.44 மெகாவாட்டை தமிழகத்திற்கும், 19.56 மெகா வாட்டை புதுச்சேரிக்கும் மத்திய மின்துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

மீதமுள்ள 150 மெகா வாட் மின்சாரம் எந்த மாநிலத்திற்கும் ஒதுக்கப்படாமல் மத்திய அரசிடம் இருக்கும். இந்த மின்சாரத்தை, மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு சுழற்சி அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
Crime: அம்மா செஞ்ச தப்பு.. அப்பா வீட்டுல இல்லாதப்ப - உண்மையை அம்பலப்படுத்திய பெற்ற குழந்தைகள்
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
3 நாள் நடிச்சுட்டு, 4வது நாள் நடிக்க மறுத்த கார்த்திக்.. சவால் விட்டு ஜெயிச்ச விக்ரமன் - என்ன படம் தெரியுமா?
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
Toyota Innova: நோவாமல் போக இன்னோவா..! உண்மையா? டொயோட்டா செய்த மேஜிக் என்ன? நம்பிக்கையின் அடையாளம்
EPS:
EPS: "என்ன பூச்சாண்டி காட்டினாலும் எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டான்.." இபிஎஸ் ஆவேசம்
Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
Tata Car Offers: Punch முதல் Harrier வரை.. ரூபாய் 1.75 லட்சம் வரை தள்ளுபடி - டிஸ்கவுண்ட் அறிவித்த டாடா!
திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
திமுகவினர் கண்ணும் கருத்துமாக இருக்கணும்... அமைச்சர் கே.என்.நேரு அட்வைஸ் எதற்காக?
Delhi Air Pollution: ரெட் சோன் சென்ற டெல்லி காற்று மாசு! தீபாவளிக்குப் பின் அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி
Delhi Air Pollution: ரெட் சோன் சென்ற டெல்லி காற்று மாசு! தீபாவளிக்குப் பின் அதிகரிப்பு.. மக்கள் கடும் அவதி
Embed widget