மேலும் அறிய

வெள்ளிக்காசு, குக்கர்.. இன்னும் இன்னும் பரிசுகள்.. சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு எதற்கு?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவேக்சின்,கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது பொதுமக்களுக்கும் போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி முதலில் போடப்பட்டபோது பல்வேறு தரப்பினரும் வதந்திகளுக்கு மத்தியில் தடுப்பூசி போட தயக்கம் காட்டினர். இதையடுத்து கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் பேராயுதம் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 70% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவானதாக ஆய்வில் தெரிய வந்தது. மதுபானங்களை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் வாங்கும்போது, கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் பதிவு செய்யும் வகையில் அசல் சான்றினையோ அல்லது கைபேசியில் வரப்பெற்ற குறுஞ்செய்தியையோ காண்பித்தால் மட்டுமே மதுபானங்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம் போன்ற உத்தரவுகளும் அதிரடியாக பிறப்பிக்கப்பட்டன. 

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ராயபுரம் மண்டலத்தில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற  6-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 22 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்பட்டது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 50 ஆயிரம் முகாம்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டன. 


வெள்ளிக்காசு, குக்கர்.. இன்னும் இன்னும் பரிசுகள்.. சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு எதற்கு?

அமெரிக்கா போன்ற நாடுகளில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு பல்வேறு பரிசு பொருட்கள் அந்நாட்டு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டன. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தற்போது 100கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பல்வேறு விழாக்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். 
இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தனியார் பங்களிப்புடன் பல்வேறு பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் தவணை தடுப்பூசி போடுவோருக்கு அந்தந்த முகாம்களில் குலுக்கல் முறையில் வெள்ளிக்காசு, குக்கர், நான் ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ், 3 லிட்டர் சமையல் எண்ணெய் உள்பட பல்வேறு பரிசுகளை மாநகராட்சி வழங்கி வருகிறது. சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget