மேலும் அறிய

கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்... கோரிக்கை வைத்த மாணவி ... தேடி வந்த உதவித்தொகை..!

காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த பொழுது, மாணவி ஒருவர் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர்.

செங்கல்பட்டு  ( Chengalpattu News ): செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி. செல்வம் தனியார் விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செல்வம் மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு 2 பெண்கள் உள்ளனர். இந்தநிலையில், இவர்களுடைய இரண்டாவது மகள் கிருத்திகா. வண்டலூர் தனியார் கல்லூரியில் பி. காம் படித்து வருகிறார். 
 
திடீர் ஆய்வின் பொழுது மாணவியிடம் குறைகளைக் கேட்டு அறியும் தமிழ்நாடு முதலமைச்சர்
திடீர் ஆய்வின் பொழுது மாணவியிடம் குறைகளைக் கேட்டு அறியும் தமிழ்நாடு முதலமைச்சர்
 
 
இந்தநிலையில் கிருத்திகா, உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை குறித்து மனு அளிக்க, கடந்த 18ஆம் தேதி, காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் மறைமலை நகரில் நடைபெற்றது. 
 
உதவித்தொகை காசோலை உடன் மாணவி மற்றும் அவரது பெற்றோர்
உதவித்தொகை காசோலை உடன் மாணவி மற்றும் அவரது பெற்றோர்
 
கள ஆய்வுக்காக வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர், திடீரென காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். அந்த சமயத்தில், அங்கிருந்த பொது மக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார். அதேபோன்று மாணவி கிருத்திகாவிடம் எதற்காக இங்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். மாணவி தனக்கு உயர்கல்வி படிப்பதற்கு உதவித்தொகை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை அறிந்த முதலமைச்சர் உடனடியாக அருகில் இருந்த அரசு அதிகாரிகளிடம் மாணவிக்கு, அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார். 
 
மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்
மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்
இதனையோடுத்து, மாவட்ட சமூக நல துறையின் சார்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, மாணவி உயர் கல்விக்காக முப்பதாயிரம் ரூபாயை காசோலையை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்

இதுகுறித்து மாணவி கிருத்திகா தெரிவிக்கையில், ”இரண்டு வாரத்திற்கு முன்பு காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்திற்காக மனு கொடுக்க சென்றிருந்தோம். அப்பொழுது திடீரென தமிழ்நாடு முதலமைச்சர் அங்கே ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார். அப்பொழுது அவர் எங்களிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்பொழுது எங்களது கோரிக்கையை அவரிடம் முன் வைத்தோம்.

 

மாணவி கிருத்திகா
மாணவி கிருத்திகா

 

தமிழ்நாடு முதலமைச்சர் வருவது என்றால் பாதுகாப்பு அம்சங்கள் செய்திருப்பார்கள். ஆனால் அது போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. அங்கு அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு கூட தெரியவில்லை முதலமைச்சர் அப்பொழுது வருகிறார் என்று, உள்ளே எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை, எதேர்ச்சியாக சென்ற பொழுது அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில்தான் கோரிக்கை வைத்த இரண்டு வாரத்திற்குள் என்னுடைய கோரிக்கை நிறைவேறி உள்ளது. உதவி தொகை தற்பொழுது வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி” என மாணவி தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

"அம்பு எய்தவன் எங்கோ இருக்கிறான் " போலீஸ் வெறும் அம்பு தான் - ஏ.வா வேலு பரபரப்பு பேட்டி
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
" வேலை வேண்டுமா " இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! சிக்கிய 37 வயது ஜிம் பயிற்சியாளர்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 16-ம் தேதி எங்கெங்க மின்சார தடை பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...
சென்னைல ஜூலை 16-ம் தேதி எங்கெங்க மின்சார தடை பண்ணப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget