மேலும் அறிய

கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்... கோரிக்கை வைத்த மாணவி ... தேடி வந்த உதவித்தொகை..!

காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த பொழுது, மாணவி ஒருவர் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர்.

செங்கல்பட்டு  ( Chengalpattu News ): செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி. செல்வம் தனியார் விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செல்வம் மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு 2 பெண்கள் உள்ளனர். இந்தநிலையில், இவர்களுடைய இரண்டாவது மகள் கிருத்திகா. வண்டலூர் தனியார் கல்லூரியில் பி. காம் படித்து வருகிறார். 
 
திடீர் ஆய்வின் பொழுது மாணவியிடம் குறைகளைக் கேட்டு அறியும் தமிழ்நாடு முதலமைச்சர்
திடீர் ஆய்வின் பொழுது மாணவியிடம் குறைகளைக் கேட்டு அறியும் தமிழ்நாடு முதலமைச்சர்
 
 
இந்தநிலையில் கிருத்திகா, உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை குறித்து மனு அளிக்க, கடந்த 18ஆம் தேதி, காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் மறைமலை நகரில் நடைபெற்றது. 
 
உதவித்தொகை காசோலை உடன் மாணவி மற்றும் அவரது பெற்றோர்
உதவித்தொகை காசோலை உடன் மாணவி மற்றும் அவரது பெற்றோர்
 
கள ஆய்வுக்காக வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர், திடீரென காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். அந்த சமயத்தில், அங்கிருந்த பொது மக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார். அதேபோன்று மாணவி கிருத்திகாவிடம் எதற்காக இங்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். மாணவி தனக்கு உயர்கல்வி படிப்பதற்கு உதவித்தொகை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை அறிந்த முதலமைச்சர் உடனடியாக அருகில் இருந்த அரசு அதிகாரிகளிடம் மாணவிக்கு, அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார். 
 
மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்
மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்
இதனையோடுத்து, மாவட்ட சமூக நல துறையின் சார்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, மாணவி உயர் கல்விக்காக முப்பதாயிரம் ரூபாயை காசோலையை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்

இதுகுறித்து மாணவி கிருத்திகா தெரிவிக்கையில், ”இரண்டு வாரத்திற்கு முன்பு காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்திற்காக மனு கொடுக்க சென்றிருந்தோம். அப்பொழுது திடீரென தமிழ்நாடு முதலமைச்சர் அங்கே ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார். அப்பொழுது அவர் எங்களிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்பொழுது எங்களது கோரிக்கையை அவரிடம் முன் வைத்தோம்.

 

மாணவி கிருத்திகா
மாணவி கிருத்திகா

 

தமிழ்நாடு முதலமைச்சர் வருவது என்றால் பாதுகாப்பு அம்சங்கள் செய்திருப்பார்கள். ஆனால் அது போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. அங்கு அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு கூட தெரியவில்லை முதலமைச்சர் அப்பொழுது வருகிறார் என்று, உள்ளே எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை, எதேர்ச்சியாக சென்ற பொழுது அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில்தான் கோரிக்கை வைத்த இரண்டு வாரத்திற்குள் என்னுடைய கோரிக்கை நிறைவேறி உள்ளது. உதவி தொகை தற்பொழுது வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி” என மாணவி தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
Bribe complaint WhatsApp number: லஞ்சம் கேட்கும் போலீசாருக்கு இனி ஆப்பு! புகார் அளிக்க இதோ மாவட்ட வாரியான வாட்ஸ்அப் எண்கள்!
திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget