மேலும் அறிய

கள ஆய்வுக்கு வந்த முதலமைச்சர்... கோரிக்கை வைத்த மாணவி ... தேடி வந்த உதவித்தொகை..!

காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த பொழுது, மாணவி ஒருவர் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர்.

செங்கல்பட்டு  ( Chengalpattu News ): செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி. செல்வம் தனியார் விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். செல்வம் மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு 2 பெண்கள் உள்ளனர். இந்தநிலையில், இவர்களுடைய இரண்டாவது மகள் கிருத்திகா. வண்டலூர் தனியார் கல்லூரியில் பி. காம் படித்து வருகிறார். 
 
திடீர் ஆய்வின் பொழுது மாணவியிடம் குறைகளைக் கேட்டு அறியும் தமிழ்நாடு முதலமைச்சர்
திடீர் ஆய்வின் பொழுது மாணவியிடம் குறைகளைக் கேட்டு அறியும் தமிழ்நாடு முதலமைச்சர்
 
 
இந்தநிலையில் கிருத்திகா, உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை குறித்து மனு அளிக்க, கடந்த 18ஆம் தேதி, காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் மறைமலை நகரில் நடைபெற்றது. 
 
உதவித்தொகை காசோலை உடன் மாணவி மற்றும் அவரது பெற்றோர்
உதவித்தொகை காசோலை உடன் மாணவி மற்றும் அவரது பெற்றோர்
 
கள ஆய்வுக்காக வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர், திடீரென காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். அந்த சமயத்தில், அங்கிருந்த பொது மக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார். அதேபோன்று மாணவி கிருத்திகாவிடம் எதற்காக இங்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். மாணவி தனக்கு உயர்கல்வி படிப்பதற்கு உதவித்தொகை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதனை அறிந்த முதலமைச்சர் உடனடியாக அருகில் இருந்த அரசு அதிகாரிகளிடம் மாணவிக்கு, அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார். 
 
மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்
மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்
இதனையோடுத்து, மாவட்ட சமூக நல துறையின் சார்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, மாணவி உயர் கல்விக்காக முப்பதாயிரம் ரூபாயை காசோலையை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டார்

இதுகுறித்து மாணவி கிருத்திகா தெரிவிக்கையில், ”இரண்டு வாரத்திற்கு முன்பு காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்திற்காக மனு கொடுக்க சென்றிருந்தோம். அப்பொழுது திடீரென தமிழ்நாடு முதலமைச்சர் அங்கே ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார். அப்பொழுது அவர் எங்களிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்பொழுது எங்களது கோரிக்கையை அவரிடம் முன் வைத்தோம்.

 

மாணவி கிருத்திகா
மாணவி கிருத்திகா

 

தமிழ்நாடு முதலமைச்சர் வருவது என்றால் பாதுகாப்பு அம்சங்கள் செய்திருப்பார்கள். ஆனால் அது போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. அங்கு அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு கூட தெரியவில்லை முதலமைச்சர் அப்பொழுது வருகிறார் என்று, உள்ளே எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை, எதேர்ச்சியாக சென்ற பொழுது அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில்தான் கோரிக்கை வைத்த இரண்டு வாரத்திற்குள் என்னுடைய கோரிக்கை நிறைவேறி உள்ளது. உதவி தொகை தற்பொழுது வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி” என மாணவி தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்தி வன்கொடுமை செய்த கொடூரர்கள் !! குண்டாஸில் அதிரடி கைது
சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!
சென்னை - காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! - இத மட்டும் செய்ய தவறினால் தண்ணீருக்கு தவிக்க நேரிடும்!
TN Weather Update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொன்ற தாய் !! காதலனுக்கு வலைவீச்சு

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget