மேலும் அறிய

Chennai: மொத்தமும் ஸ்கூல் ஃபீஸ்..! ரூ.20ஆயிரத்தை சூதாடி இழந்த கணவன்.. மனமுடைந்து மனைவி தற்கொலை!

குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வைத்த ரூ.20 ஆயிரத்தை சூதாட்டத்தில் கணவன் தோற்றத்தால் மனம் உடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வைத்த ரூ.20 ஆயிரத்தை சூதாட்டத்தில் கணவன் தோற்றத்தால் மனம் உடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நந்தம்பாக்கம் வடக்கு மாடவிதியை சேர்ந்தவர் 48 வயதான சுரேஷ்பாபு. இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். சுரேஷ்பாபுக்கு குடி மற்றும் சூதாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவரது மனைவி 46 வயதான் புவனேஷ்வரி தனியார் மருத்துவமனைக்கு சமையல் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் 2 மகன்கள் உள்ளனர். 

சுரேஷ்பாபு, ஆட்டோ ஓட்டி கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் தினமும் சீட்டாடி அழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சுரேஷ் பாபு. சீட்டாடுவதில் தோற்று குடிபோதையில் வீட்டுக்கு வருவது வழக்கம். பிறகு மனைவியிடம் சண்டைபோட்டு சூதாட பணம் கேட்டு தகராறு செய்வார்.


Chennai: மொத்தமும் ஸ்கூல் ஃபீஸ்..! ரூ.20ஆயிரத்தை சூதாடி இழந்த கணவன்.. மனமுடைந்து மனைவி தற்கொலை!

இதன் காரணமாக, புவனேஷ்வரி குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் புவனேஸ்வரிக்கு அவரது தந்தை ராஜேந்திரன் பக்க பலமாக இருந்து பல உதவிகளை செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ் பாபு மனைவியிடம் தகராறு செய்து விட்டு பிள்ளைகளின் கல்வி கட்டணத்திற்காக சிறுகசிறுக புவனேஷ்வரி சேர்த்து வைத்திருந்த 20 ஆயிரத்தை எடுத்துச் சென்றுள்ளார். இதை கவனித்த புவனேஸ்வரி தடுத்து நிறுத்தி அந்த பணத்தை பிடுங்க முயற்சித்துள்ளார். ஆனால் சுரேஷ் பாபு அவரை வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளி விட்டு வெளியே சென்றுவிட்டார்.


Chennai: மொத்தமும் ஸ்கூல் ஃபீஸ்..! ரூ.20ஆயிரத்தை சூதாடி இழந்த கணவன்.. மனமுடைந்து மனைவி தற்கொலை!

குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கு சேர்த்து வைத்த மொத்த பணமும் போய்விட்டதே என தரையில் விழுந்து புவனேஷ்வரி புரண்டு கதறி அழுதுள்ளார். மேலும், அந்த பணத்தை கணவன் சூதாட்டத் தில் தோற்றுவிட்டதை அறிந்த புவனேஷ்வரி மேலும் மனமுடைந்துள்ளார்.

இந்நிலையில், குழுந்தையை அருகில் விளையாட அனுப்பி விட்டு மின்விசிறியில் துப்பட்டாவால் புவனேஷ்வரி தூக்கிட்டுக்கொண்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை கீழே இறக்கி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், புவனேஷ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

தகவலறிந்த நுங்கம்பாக்கம் போலீசார் புவனேஷ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் சுரேஷ் பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  நந்தம்பாக்கத்தில் கணவனின் சூதாட்டத் தால் குடும்ப தலைவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget