மேலும் அறிய

Crime: நண்பரின் காதலியை படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. மனமுடைந்து ஜோடி தற்கொலை.. வழக்கில் திருப்பம்!

சென்னையில் உள்ள வட மாநில காதலர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் இரண்டு ஹோட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜ் ஒன்றில் கடந்த 7ம் தேதி அறை எண் 102ல் இருந்து துர்நாற்றம் வீசுவதாக லாட்ஜ் ஊழியர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல்துறையினர் சம்பவ விரைந்து வந்து அறையை உடைத்து உள்ளே பார்த்த போது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதும், அவர்கள் எழுதி வைத்த கடிதத்தையும் கண்டெடுத்தனர்.

வழக்கில் ஏற்பட்ட திருப்பம்: 

இதுகுறித்து வங்காள மொழியில் அவர்கள் எழுதிய கடிதத்தில், “எங்களை சேர விடாமல் தடுத்தவர்கள், இனியாவது சந்தோஷமாக இருக்கட்டும். நாங்கள் விண்ணுலகில் சந்தோஷ மாக வாழ்வோம்” என்று எழுதி இருந்தனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர்கள் மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டம் ராதா நகரை சேர்ந்த 23 வயதான பிரசஞ்சித் கோஷ்,  பங்குரா மாவட்டம் பிஷ்ணு பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அர்பிதா பால் என்பது தெரியவந்தது. 

இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாலை தி.நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் காணாமல் போனதாக ஓட்டல் ஊழியர்கள் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவல் திருவல்லிக்கேணி காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் தகவல்களை பெற்று ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் ஹோட்டலில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் என்றும், அர்பிதா பால் பிஆர்ஓ வாகவும், பிரசஞ்சித் சர்வராகவும் அந்த ஓட்டலில் பணிபுரிந்து வந்தபோது இருவரும் காதலித்துள்ளனர்.

தற்கொலை காரணம் : 

கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரசஞ்சித் தங்களது திருமணத்திற்கு சொந்த ஊரான மேற்குவங்கத்திற்கு சென்று கடந்த 3ம் தேதி மாலை ரயில் மூலமாக சென்னை வந்துள்ளார். அவரை அழைப்பதற்காக அர்பிதா பால் ரயில் நிலையம் சென்றுள்ளார். அதன் பிறகு ஹோட்டலுக்கு அவர் வரவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் அசாமைச் சேர்ந்த தர்மா என்பவர் காதலர்கள் சடலங்கள் கண்டெடுக்கப் பட்ட அன்று ஹோட்டலில் திடீரென தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் தலைமறைவான தர்மாவின் நண்பர்களான ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ்குமார், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இருவரின் செல்போனையும் பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, அதில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் புகைப்படங்கள் இருந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தற்கொலை செய்துகொண்ட அர்பிதா பாலை மிரட்டி நிதிஷ் குமார், ராஜா, தர்மா ஆகிய மூவரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் அனுமதி வாங்க, அர்பிதா பாலின் காதலர் பிரசஞ்சித் கோஷ் மேற்குவங்கம் சென்றதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட நிதிஷ்குமார், ராஜா மற்றும் தர்மா ஆகியோர் நள்ளிரவு நேரங்களில் அர்பிதா பால் தங்கியருக்கும் விடுதிக்கு சென்று அவரை உல்லாசத்துக்கு அழைத்தும், போன் மூலமாக அவரை மிரட்டியும் வந்துள்ளனர். மேலும், அவர்கள் பிரசஞ்சித் கோஷுடன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் பயம் மற்றும் மன உளைச்சலில் இருந்த அர்பிதா பால் கடந்த 3ம் தேதி மாலை மேற்குவங்கத்தில் இருந்து வந்த அவரது காதலர் பிரசஞ்சித் கோஷுடன் திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்- மனைவி எனக் கூறி அறை எடுத்து தங்கி உள்ளார். பின்பு கடிதம் எழுதி வைத்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதை தொடர்ந்து, காதலர்களை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஹோட்டல் ஊழியர்களான நிதிஷ்குமார், ராஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தர்மா என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Padayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWSCSK Vs RCB Match | ஈ சாலா கப் நம்தே RCB FANS நூதன வழிபாடு மாரியம்மா மாரியம்மா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Embed widget