மேலும் அறிய

108 ambulance: சென்னை 108 ஆம்புலன்ஸ் சேவை; 7 நிமிடங்களாகக் குறைந்த சராசரி பயண நேரம்

சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 

சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்தில் இருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 

முன்னதாக 2020ஆம் ஆண்டில் ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. அதாவது சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக 2020-ல் சென்னையில் மொத்தம் 52 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வந்தன. அப்போது, ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது. இந்நிலையில் தற்போது 108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. 79 ஆம்புலன்ஸ்கள் சென்னையில் இயங்கி வருகின்றன. 

இதில் அடிப்படை உயிர் பாதுகாப்புக்கான மருத்துவ உதவியை அளிக்கும் 53 ஆம்புலன்ஸ்கள், மேம்படுத்தப்பட்ட, நவீன உயிர் பாதுகாப்புக்கான மருத்துவ உதவியை அளிக்கும் 10 ஆம்புலன்ஸ்கள், 3 நியோ நேட்டல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 13 பைக் ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. 

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்டத் திட்ட மேலாளர் சந்தீப் குமார் கூறும்போது, ’’108 ஆம்புலன்ஸின் பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. அதாவது சென்னையில் 108 ஆம்புலன்ஸ், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி பயண நேரம் 7 நிமிடமாகக் குறைந்துள்ளது. முன்னதாக 2020ஆம் ஆண்டில் ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் ஆம்புலன்ஸ் சராசரியாக அடுத்த 8 நிமிடங்கள் 40 விநாடிகளில் நோயாளியைச் சென்றடைந்தது.


108 ambulance: சென்னை 108 ஆம்புலன்ஸ் சேவை; 7 நிமிடங்களாகக் குறைந்த சராசரி பயண நேரம்

சராசரி பயண நேரம் குறைந்ததற்கு, ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும், ஹாட்ஸ்பாட்களின் அருகிலோ அல்லது ஹாட்ஸ்பாட்டிலேயோ ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்ததும் முக்கியக் காரணங்கள் ஆகும்’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், ’’சென்னையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு சேவையைத் தொடங்கிய 108 ஆம்புலன்ஸ், 8,66,978 பேருக்கு உதவி உள்ளது. இதில் சாலை விபத்துக்கு உள்ளான மக்கள் மற்றும் கர்ப்பணிப் பெண்கள் ஆகியோரே அதிக பலன் அடைந்தோராவார். கொரோனா காலத்தில் காய்ச்சல் மற்றும் கோவிட் 19 பாதிப்புக்கு உள்ளானோருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அதேபோல பிற அவசர காலப் பிரச்சினைகளான இதயப் பிரச்சினை, சுவாசப் பிரச்சினை, பக்கவாதம், விஷம் குடித்தல் உள்ளிட்டவற்றுக்காக,  108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மக்கள் மருத்துவமனைக்குச் சென்றனர். 

108 ஆம்புலன்ஸ் அவசர கால மருத்துவ உதவி மூலம், பயணிக்கு உடனடியாகத் தேவைப்படும் முதலுதவி எந்தத் தாமதமும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையைத் தொடங்கும் வகையில், ஆம்புலன்ஸில் உள்ள மொபைல் மூலம் நோயாளியின் அறிகுறிகள் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படுகின்றன’’ என்று 108 ஆம்புலன்ஸ் மாவட்டத் திட்ட மேலாளர் சந்தீப் குமார் தெரிவித்தார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
Embed widget