Chennai Power Cut: சென்னைல நாளை (05-02-2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரங்கள் இதோ
Chennai Power Shutdown (05-02-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், பிப்ரவரி 5-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமுடிவாக்கம்
சோமங்கலம், மேலத்தூர், டிசி நகர், சக்தி நகர், புதுபேடு மேடு, புதுப்பேடு பள்ளம், சிஐடி கல்லூரி, நடுவீரப்பட்டு காந்தி நகர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் மெயின் ரோடு, பூந்தண்டலம்.
ராஜகீழ்பாக்கம்
வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர் மெயின் ரோடு, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்பா நகர், விவேகந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள் நகர், கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, குருநாதர் தெரு, ரங்கா காலனி, விஓசி தெரு, நேதாஜி தெரு, பவநந்தியார் தெரு, மாரி அம்மன் கோவில் தெரு, சாம் அவென்யூ, செம்பாக்கம் மெயின் ரோடு, மகாசக்தி காலனி, ஐஓபி காலனி, கேம்ப் ரோடு, கர்ணம் தெரு, கண்ணன் நகர், அவ்வை நகர், பாரதி நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, சின்மை காலனி, கம்பர் தெரு, மாணிக்கவாசகர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கனகராஜ் தெரு, அம்பேத்கர் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி நகர், கலைஞர் கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கட்ரமணன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், சிட்லபாக்கம், மணவாள நகர், ஏரிக்கரை தெரு
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















