மேலும் அறிய

Coronavirus in Chennai : கவனம்.! திடீர் சுழல் அலைகள்.. இழுத்துச் செல்லும் மெரினா.. எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை போலீஸ்!

மெரினாவில் காவல்துறையின் அறிவுரையை மீறி கடலில் இறங்கி குளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் மிகவும் புகழ் பெற்ற பகுதியாக விளங்குவது மெரினா கடற்கரை. விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, மெரினா கடலில் உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், காவல்துறை உதவி ஆணையர் பாஸ்கர் பொதுமக்களுக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் அன்பான வேண்டுகோள். இப்பகுதி கடல் ஆழமான பகுதி ஆகும். கடல் அலையின் வேகமும், சீற்றமும் வேகமாக உள்ளது. இப்பகுதியில் ஏற்படும் திடீர் சுழல் அலைகள் கடலில் இறங்கி விளையாடுபவர்கள் குளிப்பவர்களை உயிருடன் இழுத்துச் செல்கிறது. இளைஞர்கள் சிலரும், நீச்சல் அறிந்தவர்களும், நீச்சல் அறியாதவர்களும் கடலில் இறங்கி விளையாடி இன்னுயிரை இழந்துள்ளனர்.


Coronavirus in Chennai : கவனம்.! திடீர் சுழல் அலைகள்.. இழுத்துச் செல்லும் மெரினா.. எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை போலீஸ்!

குழந்தைகளை மகிழ்ச்சியாக இறங்கி விளையாட அனுமதிக்காதீர். பெற்றோர்களே, பொதுமக்களே எச்சரிக்கை. உயிர் போக வாய்ப்பு இருப்பதால்  அன்புச்செல்வங்களை இழக்காதீர்கள். அவசர அழைப்புக்கு 9498100024 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து யாரும் கடலில் இறங்கி குளிக்கவோ விளையாடவோ வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கிறோம்.

காவல்துறை அறிவுரையை மீறி இறங்கி விளையாடும் குளிக்கும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். கடலில் இறங்காதீர்கள். அலையில் சிக்க உயிர் இழக்காதீர். கடல் அலையில் விளையாட்டு வேண்டாம் இளைஞர்களே அலைகளின் தாக்கம் கொடூரமானது.”

இவ்வாறு அவர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.


Coronavirus in Chennai : கவனம்.! திடீர் சுழல் அலைகள்.. இழுத்துச் செல்லும் மெரினா.. எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை போலீஸ்!

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வருபவர்களுக்கும், சென்னை வாழ் மக்களுக்கும் முதன்மை சுற்றுலா தளமாக விளங்கும் மெரினா கடற்கரையில் இரண்டாம் அலையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுமக்களை அனுமதித்த முதல் நாளிலே மூன்று மாணவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரும் ரோந்து வாகனங்களிலும், குதிரைகள் மீது அமர்ந்து கடற்கரைகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், சில சமயங்களில் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு அந்த பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதன்மூலம் மெரினா கடலில் உயிரிழப்புகள் குறையும் என்று அப்பகுதியில் இருப்பவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget