இந்த 3 ரவுடிகள் சென்னைக்குள் நுழையக் கூடாது- சென்னை காவல்துறை
ராக்கெட் ராஜா உள்ளிட்ட 3 ரவுடிகள் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

பிரபல ரவுடிகள் என கூறப்படும் ராக்கெட் ராஜா, நடுவீரப்பட்டு லெனின் மற்றும் நெடுங்குன்றம் சூர்யா ஆகிய 3 பேர் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் நுழைய தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்கள் மூன்று பேரும் ஒரு வருடத்திற்கு சென்னை மாநகர காவல் எல்லைக்குள் நுழைய கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு மற்றும் காவல் நிலைய விசாரணை தவிர்த்து வேறு எதற்காகவும் சென்னைக்குள் வரக்கூடாது வரக்கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த 3 நபர்களால் தீங்கு விளைவிக்கக் கூடிய சூழல் மற்றும் வன்முறை நிகழக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி , இந்த சம்பவம் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.





















