மேலும் அறிய

மீண்டும் தலைமைச் செயலகமாகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை?

கிண்டி கிங் ஆய்வக வளகாத்தில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் முதல்வரின் புதிய அறிவிப்பின் மூலம் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98-ஆவது பிறந்தநாளையொட்டி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 250 கோடி மதிப்பீட்டில் தென்சென்னையில் உள்ள கிண்டி கிங் இன்ஸ்டியூட் ஆய்வக வளாகத்தில் புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றும் திட்டத்தின் முன்னோட்டமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மீண்டும் தலைமைச் செயலகமாகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை?

2006-11 திமுக ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்தபோது, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். பின்னர் அந்த கட்டடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கருணாநிதியின் தனிக்கவனத்தால் ஓமந்தூரார் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுவந்த சட்டமன்ற பேரவை மண்டபமும் தலைமை செயலகமும் கடந்த 2010 மார்ச் 13ஆம் தேதியன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது.

மீண்டும் தலைமைச் செயலகமாகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை?

ஆனால் 17 மாத இடைவெளிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு புதிய தலைமைச்செயலம் மற்றும் சட்டமன்ற கட்டங்களை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பை வெளியிட்டது. ஜெயலலிதாவின் இந்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்டது என விமர்சிக்கப்பட்ட நிலையிலும் அவர் 2011 மே 20 அன்று தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையின் செயல்பாடுகளை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

மீண்டும் தலைமைச் செயலகமாகிறதா ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை?

நிர்வாக வசதிக்காக மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்ததாக குறிப்பிட்ட ஜெயலலிதா, புதிய தலைமை செயலகம் கட்டுவதற்காக தனது முந்தைய அரசாங்கம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் திமுக தடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் 2011 ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜெயலலிதா, பயன்படுத்தப்படாமல் உள்ள புதிய தலைமைச் செயலக வளாகம் ஏழை எளிய மக்களின் மருத்துவ வசதிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகரான பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றும் உத்தரவை பிறப்பித்திருந்தார்.

ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பிறகு ஓமந்தூரார் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகம் திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. மாநில சுகாதாரத்துறையின் முக்கிய மருத்துவ நடவடிக்கைகளும் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கூட்டங்களும் அங்கு நடந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு சென்னையில் உச்சத்தில் இருந்த நிலையில் தொற்று பாதித்தவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சேவைகளை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் புதிய பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின் மூலம் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகம் மீண்டும் தலைமைச்செயலகமாக மாற்றப்படுமா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் விதைத்துள்ளது

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
இப்படியே போனால் சென்னைக்கு ஆபத்து! கூவம் போல மாறும் புழல் ஏரி - அரசுக்கு வீரபாண்டியன் அவசர அலர்ட்
இப்படியே போனால் சென்னைக்கு ஆபத்து! கூவம் போல மாறும் புழல் ஏரி - அரசுக்கு வீரபாண்டியன் அவசர அலர்ட்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
Vanathi Srinivasan: விசாரணை கைதி மரணம்.. காவல் நிலையம் சித்ரவதைக்கூடமா? .. விஜயை விளாசிய வானதி சீனிவாசன்!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
ஒரே ஆண்டில் ஒரு லட்சம் ஏக்கர் காலி! தமிழகத்தை உலுக்கும் தண்ணீர் பற்றாக்குறை! முழு விபரம் உள்ளே!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
Embed widget