மேலும் அறிய

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?

தொடர்ந்து கடந்த சில நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 75 நிரந்தரப் பணியாளர்களும், 219 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 நாட்கள் வேலை அளித்து, அதற்கான ஊதியத்தை தினக்கூலி அடிப்படையில் நிர்வாகம் வழங்கி வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை நிர்வாகமே நேரடியாக வழங்கி வரும் நிலையில், அவர்களை தனியார் நிறுவனத்தின்கீழ் கொண்டுவர பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தை கண்டித்து, ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
 
இதுகுறித்து பராமரிப்பாளராக 15 வருடங்களாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் நிர்மலா என்பவர் கூறுகையில், 15 ஆண்டுகளாக நாங்கள் பராமரித்து வருகிறோம். இங்கிருக்கும் ஒவ்வொரு சிங்கம் புலி என எந்த விலங்குகளாக இருந்தாலும் நாங்கள் அவற்றை குழந்தைகளாகவே கருதுகிறோம். எளிதில் யாராலும் இந்த பணியை ஒரே நாளில் செய்துவிட முடியாது. தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம் எங்களுக்கான உரிமையை அரசு தர வேண்டும் என தெரிவித்தார்.
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் பால்பாண்டி கூறுகையில், இங்கிருக்கும் ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளர்களும் அன்னாடங்காய்ச்சிகளாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்கிறோம் எனக் கூறி பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கொரோனா தொற்று காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த இவர்களை முன்கள பணியாளர்களாக, அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். இப்படிப்பட்ட சூழலில் தினக்கூலியாக அரசாங்கத்திடம் இருந்து பெற்று வந்தோம். ஆனால் இப்போது எங்களை தனியாரிடம் தாரைவார்த்து இருப்பது வருந்தத்தக்கது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது .
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
 
அரசாங்கமே ஊழியர்களை அழைத்துப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை. எவ்வளவு கல்லூரிகள் உள்ளது. ஆனால் எங்கேயாவது புலி, யானை விலங்குகளைப் பராமரிக்கக் கற்றுக் கொடுக்கிறார்களா. அப்படி எதுவும் இல்லை, ஆனால் பட்டம் பெறாமல், எப்படி அவற்றை பாதுகாப்பது என்பது குறித்து இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தான் தெரியும். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் கூட தனியார் வேண்டாம். இவர்கள் உடனடியாக இதில் பின்வாங்கவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் போராட்டம் இருக்கும். தனியாரிடம் தாரைவார்த்து ஊழியர்கள் என்ன அடிமைகளா என தெரிவித்தார்.
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
 
இதுகுறித்து முன்னாள் ஊழியர் இரணியப்பன் கூறுகையில், நான் இங்கே தினக்கூலி ஊழியராக பணியில் சேர்ந்து நிரந்தர ஊழியராக அரசால் நிரந்தரம் செய்யப்பட்டேன். ஆனால் தற்போது தனியாரிடம் கொடுத்திருப்பது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதற்கு சமமாகும். ஏதாவது ஒன்று என்று நிர்வாகத்தை கேட்டால் ,இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, இதற்கு பொறுப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் தான் என நிர்வாகம் கைவிரித்து விடும். கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஊழியர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். விலங்குகளை பராமரிப்பது என்பது எளிதான காரியமல்ல. காலி பணியிடங்களை  நிரப்பினால் போதும்  என தெரிவித்தார்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Malavika Mohanan : தோழியடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : தோழியடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Thanthi 1: அப்படி போடு! மேலும் ஒரு பொழுதுபோக்கு சேனல்! சூப்பர் அப்டேட் கொடுத்த தந்தி குரூப்!
Thanthi 1: அப்படி போடு! மேலும் ஒரு பொழுதுபோக்கு சேனல்! சூப்பர் அப்டேட் கொடுத்த தந்தி குரூப்!
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Embed widget