மேலும் அறிய

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?

தொடர்ந்து கடந்த சில நாட்களாக வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 75 நிரந்தரப் பணியாளர்களும், 219 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 நாட்கள் வேலை அளித்து, அதற்கான ஊதியத்தை தினக்கூலி அடிப்படையில் நிர்வாகம் வழங்கி வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை நிர்வாகமே நேரடியாக வழங்கி வரும் நிலையில், அவர்களை தனியார் நிறுவனத்தின்கீழ் கொண்டுவர பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தை கண்டித்து, ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
 
இதுகுறித்து பராமரிப்பாளராக 15 வருடங்களாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வரும் நிர்மலா என்பவர் கூறுகையில், 15 ஆண்டுகளாக நாங்கள் பராமரித்து வருகிறோம். இங்கிருக்கும் ஒவ்வொரு சிங்கம் புலி என எந்த விலங்குகளாக இருந்தாலும் நாங்கள் அவற்றை குழந்தைகளாகவே கருதுகிறோம். எளிதில் யாராலும் இந்த பணியை ஒரே நாளில் செய்துவிட முடியாது. தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம் எங்களுக்கான உரிமையை அரசு தர வேண்டும் என தெரிவித்தார்.
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க தலைவர் பால்பாண்டி கூறுகையில், இங்கிருக்கும் ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளர்களும் அன்னாடங்காய்ச்சிகளாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்கிறோம் எனக் கூறி பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கொரோனா தொற்று காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த இவர்களை முன்கள பணியாளர்களாக, அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். இப்படிப்பட்ட சூழலில் தினக்கூலியாக அரசாங்கத்திடம் இருந்து பெற்று வந்தோம். ஆனால் இப்போது எங்களை தனியாரிடம் தாரைவார்த்து இருப்பது வருந்தத்தக்கது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது .
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
 
அரசாங்கமே ஊழியர்களை அழைத்துப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை. எவ்வளவு கல்லூரிகள் உள்ளது. ஆனால் எங்கேயாவது புலி, யானை விலங்குகளைப் பராமரிக்கக் கற்றுக் கொடுக்கிறார்களா. அப்படி எதுவும் இல்லை, ஆனால் பட்டம் பெறாமல், எப்படி அவற்றை பாதுகாப்பது என்பது குறித்து இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தான் தெரியும். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் கூட தனியார் வேண்டாம். இவர்கள் உடனடியாக இதில் பின்வாங்கவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் போராட்டம் இருக்கும். தனியாரிடம் தாரைவார்த்து ஊழியர்கள் என்ன அடிமைகளா என தெரிவித்தார்.
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் போராட்டம்...தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ஊழியர்கள்... முழு பின்னணி என்ன?
 
இதுகுறித்து முன்னாள் ஊழியர் இரணியப்பன் கூறுகையில், நான் இங்கே தினக்கூலி ஊழியராக பணியில் சேர்ந்து நிரந்தர ஊழியராக அரசால் நிரந்தரம் செய்யப்பட்டேன். ஆனால் தற்போது தனியாரிடம் கொடுத்திருப்பது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதற்கு சமமாகும். ஏதாவது ஒன்று என்று நிர்வாகத்தை கேட்டால் ,இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, இதற்கு பொறுப்பு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் தான் என நிர்வாகம் கைவிரித்து விடும். கடந்த 15 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஊழியர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். விலங்குகளை பராமரிப்பது என்பது எளிதான காரியமல்ல. காலி பணியிடங்களை  நிரப்பினால் போதும்  என தெரிவித்தார்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
Embed widget