மேலும் அறிய

சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்...சாலையில் திரியும் மாடுகளால் மற்றொரு உயிரிழப்பு..!

சென்னை நங்கநல்லூரில் தெருவில் நடந்து சென்ற 61 வயது ஆண் மீது, எருமை மாடுகள் முட்டியதில், வயிற்றின் குடல் சரிந்து, அதே இடத்தில் உயிரிழப்பு.

சென்னை (Chennai News): சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாடுகள் அட்டகாசத்தால், உயிர் இழப்பவர்கள், படுகாயம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளின் அதிகாரிகள், மாடுகள் அட்டகாசத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்காமல், மென்மையான போக்கை கடைபிடிப்பதாக, பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். 
 
சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி மெயின் ரோடு பகுதியில் வசித்தவர் சந்திரசேகர் (61). இவர் நேற்று மாலை 4:30 மணி அளவில் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டே இருந்தார். அப்போது இரண்டு எருமை மாடுகள், ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு வந்து, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சந்திரசேகர் என்பவரை, கொம்புகளால் முட்டி தள்ளின.
 
மாடுகள் வயிற்றில் முட்டியதால், பலத்த காயமடைந்து அதே இடத்தில் விழுந்து கிடந்தார். இதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து, சந்திரசேகரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக  வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலர், அவர்களாகவே ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, சந்திரசேகர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
 
இதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர். தொடர்ச்சியாக இந்தப் பகுதியில் மாடுகள் அட்டகாசம் காரணமாக, சிலர் உயிரிழந்து வருகின்றனர். சிலர் காயம் அடைந்து வருகின்றனர். ஆனால் சென்னை மாநகராட்சி, இதேப் போன்ற ஒரு சம்பவம் நடக்கும் போது, பரபரப்பாக நடவடிக்கை எடுப்பது போல் செயல்படுகின்றனர். அதன்பின்பு மவுனமாகி விடுகின்றனர். இந்த சோகம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. மாடுகள் அட்டகாசத்தால், அப்பாவி மக்கள் உயிர் இழக்கின்றனர். படுகாயங்கள் அடைந்து மருத்துவமனையில் பெருமளவு செலவு செய்து, உயிர் பிழைக்கின்றனர்.
 
அருகே உள்ள தாம்பரம் மாநகராட்சியிலும், இந்த மாடுகள் அட்டகாசம் தொடர்கிறது. கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி, தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில், கணவன் மனைவி நடந்து சென்றவர்களை, மாடுகள் விரட்டி முட்டியதில், 80 வயசு முதியவர், படுகாயம் அடைந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சுமார் ஒரு வாரம் கழித்து உயிரிழந்தார். இந்தநிலையில் நங்கநல்லூரில் நேற்று உயிரிழந்த சந்திரசேகர் உடலை, பழவந்தாங்கல் போலீசார், கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
 
இந்தநிலையில் இன்று மாநகராட்சி  செயலாளர் ராதாகிருஷ்ணன்  நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து அவர் கூறுகையில், “தொடர்ந்து  மாடுகளை  சாலைகளில் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாட்டின் உரிமையாளர்கள்   மாடுகளுக்கு தண்ணீர் கொடுத்து பராமரிக்காததால் தான் அவை தெருவுக்கு வருகின்றது. உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை  சார்பில் தேடி வருகின்றனர்.  எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கை காரணமாக ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்தது தற்போது மீண்டும் இச்சம்பவம் நடந்தேறி உள்ளது” என தெரிவித்தார்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்! வெற்றி பெறுமா ? அன்புமணியின் திட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்! வெற்றி பெறுமா அன்புமணியின் திட்டம்?
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
JOB ALERT: ஒரே நாளில் கொத்தாக 50,000 வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் கொத்தாக 50,000 வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- அசத்தல் அறிவிப்பு
Embed widget