மேலும் அறிய

சொகுசு கார் தயாரித்த ஃபோர்டு நிறுவனத்தில் என்ன நடக்கிறது?! நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்..!

மறைமலை நகர் ஃபோர்டு தொழிற்சாலையில் ஊக்க தொகை, ஓய்வூதியம் உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நிரந்தர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜூன் 30 மூடப்படுகிறது
 
மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை ஜூன் 30-ஆம் தேதியோடு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்துவரும் நிரந்தர தொழிலாளர்கள் 2,650 பேர் ஆரம்பத்தில் பணி பாதுகாப்பு கேட்ட நிலையில் மறைமலைநகர் தொழிற்சாலை செயல்படாது என நிர்வாகம் வாய்மொழியில் கூறியுள்ளதன் காரணமாக ஊக்கத்தொகை ஓய்வூதியம் உள்ளிட்டவை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

சொகுசு கார் தயாரித்த ஃபோர்டு நிறுவனத்தில் என்ன நடக்கிறது?! நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்..!
 
35 முறை பேச்சுவார்த்தை
 
கடந்த ஒரு வருடமாக நிரந்தர தொழிலாளர் சங்கத்துடன் போர்டு நிர்வாகம் 35 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஊக்கத்தொகை ஓய்வூதியம் தருவதற்கு நிர்வாகம் மறுத்துள்ள நிலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொழிற்சாலை மூடப்படுவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் பணி செய்ய வரும் தொழிலாளர்களிடம் நாங்கள் போராட மாட்டோம் என கையொப்பம் பெற நிர்வாகம் முயற்சி செய்வதாக கூறி நேற்று காலை பணிக்கு வந்த 1300-க்கும் மேற்பட்டோர் மறைமலைநகரில் உள்ள ஒரு தொழிற்சாலையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சொகுசு கார் தயாரித்த ஃபோர்டு நிறுவனத்தில் என்ன நடக்கிறது?! நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்..!
 
நள்ளிரவில்  போராட்டம்
 
இதனைத் தொடர்ந்து மதிய பணிக்கு வந்த ஊழியர்கள் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் வெளியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கூட்டத்திற்கு உள்ளே அனுப்பாத நிலையில் வெளியே இருந்து நள்ளிரவு வரை போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விடியற்காலை வரை போராட்டம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊழியர்கள் தங்களுக்கு முறையாக நியாயமாக கிடைக்கவேண்டிய பலன்கள் கிடைக்க வேண்டும் எனக்கூறி நள்ளிரவில் வெளியில் படுத்து உறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போராட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தொழிலாளிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்
 

சொகுசு கார் தயாரித்த ஃபோர்டு நிறுவனத்தில் என்ன நடக்கிறது?! நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்..!
 
என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு
 
 
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 

சொகுசு கார் தயாரித்த ஃபோர்டு நிறுவனத்தில் என்ன நடக்கிறது?! நள்ளிரவிலும் தொடரும் போராட்டம்..!
 
எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
குஜராத்துக்கு டாடா  தமிழகத்திற்கு "டாடா"
 
இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்த தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க ஃபோர்டு நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது ஃபோர்டு நிறுவனமறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில், ECOSPORTS, எண்டவர்'. 'ஃபிகோ' மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
 
இதுவரை பெற்ற ஆர்டர்களில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால், வருகின்ற ஜூன் மாதம் வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக தொழிற்சாலையை இதுவரை யாரும் வாங்க முன் வராத நிலையில், குஜராத்தில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்குவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில்தான் சென்னையில் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget