மேலும் அறிய

Local Trains Cancelled: பயணிகளே உஷார்.... மீண்டும் ரத்தாகும் சென்னை மின்சார ரயில்கள்.. எத்தனை நாட்கள் தெரியுமா?

Chennai Locals Train Cancelled: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையில், இயக்கப்படும் மின்சார ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை - கடற்கரை செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

சென்னை மின்சார ரயில் 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பொது மக்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலருக்கும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயிலை  பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். 

ரத்து செய்யப்படுவது வழக்கம் 

பொதுவாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் பராமரிப்புக்கு பணி காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. சென்னை கடற்கரை - விழுப்புரம் மற்றும் எழும்பூர் வழித்தடங்களில், பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழுமையாக ரத்தாகும் ரயில்கள்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரையில் இருந்து வரும் இரவு ரயில்கள் 9:10, 9:30 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் ரயில்களும் , இரவு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயில்கள் (10:40,11:20,11:40 ) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 5 மற்றும் 7ஆம் தேதிகளில் இந்த ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . 

சென்னை கடற்கரையில் இருந்து இன்று, செப்டம்பர் 6 மற்றும் செப்டம்பர் எட்டாம் தேதிகளில் காலை 4:15 மணிக்கு புறப்படும் தாம்பரம் ரயில்களும் , இரவு 7:50 மணிக்கு புறப்படும் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. 

பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் 

சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11:05, 11:30,11:59 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் மின்சார ரயில்களும் இரவு 10.40 மணிக்கு செங்கல்பட்டு புறப்படும் மின்சார ரயில்களும், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் வருகின்ற செப்டம்பர் 5 மற்றும் 7ஆம் தேதி எழும்பூரில் இருந்து இயக்கப்படும். 

செங்கல்பட்டில் இருந்து இரவு 8:45, 9:10,1 0:10, 11 ஆகிய மணி நேரங்களில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செப்டம்பர் 5 மற்றும் 7 திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். 

சென்னை கடற்கரையிலிருந்து 6 மற்றும் 8 தேதிகளில் காலை 3:55 மணிக்கு ‌ புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ ஒரு சில ரயில்கள் முழுமையாக, ஒரு சில ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சென்னை கடற்கரை - செங்கல்பட்டியிலேயே மின்சார  ரயில்கள் முழுமையாகவும் சில ரயில்கள் எழும்பூர் வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அதற்கேற்றார் போல் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள் இத்தனையா? பட்டியல் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Seeman : கொடுத்த காசிற்கு கூவ வேண்டும்! பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசிய சீமான்
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Maha Kumbh Mela: பாதி இந்தியா பங்கேற்ற மகா கும்பமேளா நிறைவு! இத்தனை கோடி பக்தர்களா போனாங்க?
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
அம்மா பாட.. அப்பா இயக்க.. விஜய் ஆட்டம் போட்ட பாட்டு என்ன தெரியுமா?
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Embed widget