மேலும் அறிய

Local Trains Cancelled: பயணிகளே உஷார்.... மீண்டும் ரத்தாகும் சென்னை மின்சார ரயில்கள்.. எத்தனை நாட்கள் தெரியுமா?

Chennai Locals Train Cancelled: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையில், இயக்கப்படும் மின்சார ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை - கடற்கரை செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

சென்னை மின்சார ரயில் 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பொது மக்கள், வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலருக்கும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயிலை  பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். 

ரத்து செய்யப்படுவது வழக்கம் 

பொதுவாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் பராமரிப்புக்கு பணி காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. சென்னை கடற்கரை - விழுப்புரம் மற்றும் எழும்பூர் வழித்தடங்களில், பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழுமையாக ரத்தாகும் ரயில்கள்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரையில் இருந்து வரும் இரவு ரயில்கள் 9:10, 9:30 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் ரயில்களும் , இரவு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயில்கள் (10:40,11:20,11:40 ) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 5 மற்றும் 7ஆம் தேதிகளில் இந்த ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . 

சென்னை கடற்கரையில் இருந்து இன்று, செப்டம்பர் 6 மற்றும் செப்டம்பர் எட்டாம் தேதிகளில் காலை 4:15 மணிக்கு புறப்படும் தாம்பரம் ரயில்களும் , இரவு 7:50 மணிக்கு புறப்படும் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. 

பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் 

சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11:05, 11:30,11:59 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் மின்சார ரயில்களும் இரவு 10.40 மணிக்கு செங்கல்பட்டு புறப்படும் மின்சார ரயில்களும், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் வருகின்ற செப்டம்பர் 5 மற்றும் 7ஆம் தேதி எழும்பூரில் இருந்து இயக்கப்படும். 

செங்கல்பட்டில் இருந்து இரவு 8:45, 9:10,1 0:10, 11 ஆகிய மணி நேரங்களில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செப்டம்பர் 5 மற்றும் 7 திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கக்கூடிய மின்சார ரயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். 

சென்னை கடற்கரையிலிருந்து 6 மற்றும் 8 தேதிகளில் காலை 3:55 மணிக்கு ‌ புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ ஒரு சில ரயில்கள் முழுமையாக, ஒரு சில ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சென்னை கடற்கரை - செங்கல்பட்டியிலேயே மின்சார  ரயில்கள் முழுமையாகவும் சில ரயில்கள் எழும்பூர் வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அதற்கேற்றார் போல் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெற்கு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget