மேலும் அறிய

Chennai AC Train: வெயிலுக்கு குளிர்ச்சியான செய்தி.. இன்று முதல் சென்னை புறநகர் ஏசி ரயிலின் சேவை அதிகரிப்பு..

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ஏசி மின்சார ரயிலின் சேவை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரயில் சேவை குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக, அதிலும் குறிப்பாக புறநகர் பகுதிகளை இணைப்பதில், ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் சேவை ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வெயில் வட்டி வதைக்கும் இந்த நேரத்தில், இன்று முதல் ஏசி ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான ஏசி ரயில் சேவை

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான ரயில் தடம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய ரயில் வழித்தடமாக இது இருக்கிறது.

இந்நிலையில், ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட காலமாக கோரிக்கையை ஏற்று, ஏசி ரயில்களை தயாரித்தது ரயில்வே நிர்வாகம். கடந்த மார்ச் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ஏப்ரல் 19-ம் தேதி முதல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே தமிழகத்தின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது.

குளிர்சாதன வசதியுடன் 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்துவருகின்றனர். இந்த ரயிலில் ரயில் நிலையங்களின் விவர அறிவிப்பு, தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமரா, ஓட்டுநரை தொடர்பு கொள்வதற்கான சாதனம் என பல வசதிகள் உள்ளன. 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயிலில், 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரயிலில் அமர்ந்தும், நின்றும் 5,700 பேர் பயணிப்பதற்கான இட வசதி உள்ளது.

இன்றுமுதல் கூடுதல் ரயில் சேவை

இந்நிலையில், மக்களை குளிர்வித்த இந்த ஏசி ரயிலின் சேவையை, பீக் ஹவர்களில் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம், இன்று முதல் கூடுதல் சேவையை தொடங்கியுள்ளது. அதன்படி, 6 வேளைகளில் இயக்கப்பட்டுவந்த ஏசி ரயில் தற்போது 8 வேளைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி,

  • காலை 6.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்கு காலை 7.35 மணிக்கு சென்றடையும்.
  • காலை 7.50 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9.25 மணிக்கு சென்றடையும்.
  • காலை 9.41 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 10.36 மணிக்கு சென்றடையும்.
  • மதியம் 1 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு மதியம் 1.55 மணிக்கு சென்றடையும். 
  • மதியம் 2.30 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.
  • மாலை 4.30 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு மாலை 6 மணிக்கு சென்றடையும். 
  • மாலை 6.17 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டிற்கு இரவு 7.50 மணிக்கு சென்றடையும்.
  • இரவு 8.10 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு இரவு 8.50 மணிக்கு சென்றடையும்.

இந்த புதிய அட்டவணை இன்றுமுதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ரயில் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏசி ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget