மேலும் அறிய

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு

’’சந்த் கபீர் விருது நெசவுத்துறையின் உயரிய விருதாக கருதப்படுகிறது’’

சிறந்த முறையில் பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு சந்த்கபீர்  தேசிய விருதை  மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள நகரீஸ்வரர் கோயில் தெருவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நெசவாளர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் ஆண்டு தோறும் பட்டுச்சேலைகளில் சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்வு செய்து மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை செய்கிறது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு
 
கைத்தறி விருதுகளில் முதன்மையான விருதாக கருதப்படும் 2018ஆம் ஆண்டுக்கான சந்த் கபீர் விருது ஒருவருக்கும் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருது 4 பேருக்கும் என காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்கள் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு
 
தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை பாராட்டிய பின்னர் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தின் உதவி இயக்குநர் ஆர்.சசிகலா கூறியது, நெசவாளர்களுக்கே உரிய மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான சந்த் கபீர் விருது இந்த ஆண்டு காஞ்சிபுரத்துக்கு கிடைத்திருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான இந்த விருதை காஞ்சிபுரம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பி.கிருஷ்ணமூர்த்தி (61) பெறவுள்ளார். இந்த விருதுடன் ஒரு தங்க நாணயம், 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், 10 ஆயிரம் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை,பெயர் பொறிக்கப்பட்ட தாமிரப்பத்திரம், 3 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியன வழங்கப்படும்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு
 
சிறந்த நெசவாளர் என்ற முறையில் இவ்விருது கிடைத்துள்ளது. மத்திய,மாநில அரசுகளிடமிருந்து ஏற்கனவே விருது பெற்றிருந்தால் மட்டுமே இந்த உயரிய விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியும். இவரை தவிர மேலும் 4 பேர் தரமான கோர்வை ரக பட்டுச்சேலை வடிவமைத்தமைக்காக சிறந்த நெசவாளர்களாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெறுகிறார்கள். காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த காமாட்சி, ஹரி, தர்மலிங்க நகரைச் சேர்ந்த சரளா-கணபதி தம்பதி, சிறந்த பட்டுப்புடவையை வடிவமைத்தமைக்காக இவ்விருது இரு தம்பதியர்களுக்கும் இணைத்து தனித்தனியாக வழங்கப்படவுள்ளது. அதே போல காஞ்சிபுரம் கணிகண்டீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த ருக்மணி கண்ணியவேல் (49) காஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ள தெருவைச் சேர்ந்த ஏ.ஹரி (54) உட்பட இவர்கள் 4 பேரும் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 நெசவாளர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு
 
இவ்விருதுடன் 4 பேருக்கும் தலா 1.50 லட்சம், 10 ஆயிரம் மதிப்புள்ள காஷ்மீர் சால்வை 1, ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன், நெசவாளர் பெயர் பொறிக்கப்பட்ட தாமிரப்பத்திரம் ஆகியனவும் வழங்கப்படும். தமிழகத்தில் காஞ்சிபுரம் மட்டுமே சிறந்த சிறந்த நெசவாளர்களுக்கான 5 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது வழங்கப்படுவது தாமதமாகி இருந்தது. இவ்விருதுகள் புது தில்லியில் விரைவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட இருப்பதாகவும் ஆர்.சசிகலா தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ப்ரோட்டோகால் என உளறிய மேயர் ப்ரியா..! ஆணவத்தில் எம்.எல்.ஏ.,வை அவமதித்தாரா? TVK பதிலடி
ப்ரோட்டோகால் என உளறிய மேயர் ப்ரியா..! ஆணவத்தில் எம்.எல்.ஏ.,வை அவமதித்தாரா? TVK பதிலடி
17 வயது மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை–தீவிர வேட்டையில் குற்றவாளிகளை தேடி வரும் போலீஸ்
17 வயது மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை–தீவிர வேட்டையில் குற்றவாளிகளை தேடி வரும் போலீஸ்
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget