மேலும் அறிய

வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தும் நடைபயணம் - தடுத்து நிறுத்திய காவல் துறை

வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தும் நடைபயணம் காவல்துறையால் தடுத்து நிறுத்தம் - எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம்

மெட்ரிக் டன் நெல் உற்பத்தி 1.22 கோடி ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 2020-2021இல் 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி இருந்த நிலையில், 2021-22 ல் அது 1.22 கோடி மெட்ரிக்டன்னாக அதிகரித்துள்ளது. இதில் பெரும் பங்கு காவிரி டெல்டாவுக்கு உண்டு. அதைப் பாதுகாப்பது அரசின் கடமை என அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்குப் பிறகு, ‘ பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா ’ 2020 - ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ; 

மீத்தேன் திட்ட எதிப்பு கூட்டமைப்பு சார்பாக, வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற முழக்கத்தோடு, பேராசிரியர் த.செயராமன் அவர்களின் தலைமையில், பூம்புகார் தொடங்கி தஞ்சை வரையிலான மண்ணின் மக்களின் நடைபயணம் தமிழக காவல்துறையால் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வோம் என வலியுறுத்தி ஜனநாயக ரீதியில் அமைதியான வழியில் நடைபயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை ஜனநாயக விரோதமானது. காவல்துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது.

பாதுகாப்பு மண்டலம்

காவிரி டெல்டா மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், வேளாண் மண்டலத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடைபயணம் மேற்கொள்வதற்கு மட்டுமின்றி, வாகனம் மூலமாக சென்று பிரச்சாரம் செய்யவோ, துண்டறிக்கைகள் கொடுக்கவோ கூட எவ்வித அனுமதியும் இல்லை எனவும், மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலிடத்து உத்தரவு

ஜனநாயக ரீதியில் நடைபெறும் நடைபயணத்திற்கான தடைக்கு உரிய காரணத்தை தெரிவிக்காமல் மேலிடத்து உத்தரவு என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதன் மூலம், யாரை திருப்திபடுத்த இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்கிற கேள்வி எழுகின்றது. 

தமிழக அரசின் கருத்துரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கை கைவிடப்பட வேண்டும். ஜனநாயக வழி போராட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பது தான் உண்மையான மக்களாட்சி தத்துவத்தை பூர்த்தி செய்யும் என்பதை உணர்ந்து தமிழக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மீத்தேன் திட்ட எதிப்பு கூட்டமைப்பின் நடைபயணத்திற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
பாஜக பக்கம் சாய்கிறாரா சசி தரூர் ? ராகுலுக்கு எதிராக பேசியதால் பரபரப்பு! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்
Trump-Musk Rift Ends?: ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
ட்ரம்ப் - மஸ்க் மோதல் முடிவுக்கு வந்ததா.? சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம் - நடந்தது என்ன.?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
Embed widget