மேலும் அறிய

Aadi Pooram: பல்லவர் கால அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கோலாகலம்..! கருவறையில் பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்..!

ஆடிப்பூரம் விழாவையொட்டி உத்திரமேரூர் பல்லவர் கால துர்க்கை அம்மனுக்கு 501 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

பல்லவர் கால துர்க்கை அம்மன்
 
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பல்லவர் காலத்தை சார்ந்த பழமையான துர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது.  ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பெண் பக்தர்கள் விரதம் இருந்து பால் குடம் எடுத்து ஊர்வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

Aadi Pooram: பல்லவர் கால அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கோலாகலம்..! கருவறையில் பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்..!
501 பெண் பக்தர்கள்
 
அந்த வகையில் இன்று 33-வது ஆண்டாக துர்க்கை அம்மன் ஆலயத்தில் சீரும் சிறப்புமாக பாலாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி உத்திரமேரூர் ,  பஜார் வீதியில் அமைந்துள்ள முத்து பிள்ளையார் கோவிலில், 501 பெண் பக்தர்கள்  ஒரேமாதிரியான  சீருடை அணிந்து தங்களது தலைகளில் பால் குடங்களை சுமந்து மங்களவாத்தியங்கள் மற்றும் தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர்.

Aadi Pooram: பல்லவர் கால அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கோலாகலம்..! கருவறையில் பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்..!
 
கைகளாலே பாலபிஷேகம் 
 
இந்த ஊர்வலம் பஜார் வீதி மற்றும் முக்கிய பிரதான வீதிகளின் வழியாக சென்று துர்கையம்மன் ஆலயத்தை அடைந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் தாங்கள் விரதம் இருந்து கொண்டு வந்த பாலை மூலவருக்கு கருவறைக்கு சென்று , தங்கள் கைகளாளேயே பாலபிஷேகம் செய்தார்கள். பின்னர், பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் மகளிர் வார வழிபாட்டு மன்றம்,  ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Aadi Pooram: பல்லவர் கால அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கோலாகலம்..! கருவறையில் பாலாபிஷேகம் செய்த பக்தர்கள்..!
 
ஆடிப்பூரம் ( aadi pooram )
 
ஆடி என்றாலே  திருவிழா   என்பதுதான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் . அந்த அளவிற்கு ஆடி மாதம் முழுவதும் பல முக்கிய நாட்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஆடிப்பூரம் என்னும் விழா  ஆடி மாதத்தில் வரும் பூச  நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் பொழுது  கொண்டாடப்படுகிறது.  இது அம்மனுக்குரிய திருநாளாக கருதப்படுகிறது.  ஆடி மாத வரும் பூச நட்சத்திரத்தில், இந்த விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.  
 
ஆடி மாதம்  பூச நட்சத்திரத்தில்  அம்மனுக்குரிய விசேஷ தினமாக கருதப்படுவதால், முனிவர்களும், சித்தர்களும், ஞானிகளும் இந்த நாளில் தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் பல புராணங்கள் எடுத்துரைக்கின்றன.  இதே ஆடிப்பூர நட்சத்திரத்தின் பொழுது , தான் பூமாதேவி  ஆண்டாளாக, அவதாரம் எடுத்தாள் என புராணங்கள் விளக்குகின்றன.  இதன் காரணமாக வைணவ தளங்களிலும்  ஆடிப்பூரும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூர விழா விமர்சையாக கொண்டாடப்படுவது மட்டுமில்லாமல் பால்குடம் எடுத்தால், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட விழாக்களும்  கொண்டாடப்பட்டு வருகிறது. திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget