மேலும் அறிய

வெட்டப்பட்ட மரங்கள்..மாலை, பாலுடன் வந்து அஞ்சலி செலுத்திய பசுமைத்தாயகம்..

"பசுமை தாயகம் அமைப்பினர், வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது "

செங்கல்பட்டு மாவட்டம் கீரல்வாடி என்ற கிராமத்தில், நெடுஞ்சாலைத் துறையால் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி  செலுத்திய பசுமை தாயகத்தினர்.

நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் , அடுத்த முதுகரை  கிழக்கு கடற்கரைச் சாலை,  கடலூர் கிராமம் வரை மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் அமைந்துள்ள ஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம், பனை மரம் உட்பட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்
வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்

 

மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  மரங்களை வேரோடு பிடிங்கி மாற்று இடம் பள்ளி கூடம், குளம், பூங்காக்கள், நீர் பிடிப்பு பகுதியில் நட வேண்டியும் - செங்கல்பட்டு  பசுமைத்தாயகம் சார்பாக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து, மெழுகுவத்தி ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (02.09.2023) கீரல்வாடி கிராமத்தில் நடைபெற்றது.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்
வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்

இதில் பசுமைத்தாக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு, மரத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மரத்திற்கு இறுதி அஞ்சலி, செலுத்திய சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளத்தில் பரவும் புகைப்படங்கள்

மரத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் பசுமைத்தாயகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஓட்டகோயில் நா.சுரேஷ் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில் பசுமைத் தாயகம், மாநிலத் துணைச் செயலாளர் ஐ .நா.கண்ணன், செங்கற்பட்டு தெற்கு மாவட்ட பசுமைத் தாயகம் ஆலோசகர் கி. குமரவேல் மற்றும் மோகனரங்கம் , அன்பு, வினோத்குமார், கிளியா நகர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்
வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்

பசுமைத் தாயகம் சார்பில் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில், வைரலாக பரவி வருகிறது. வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, நிறைய மரங்கள் நட வேண்டும் என சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்து வருகிறார். மரங்களுக்கு அஞ்சலி செலுத்துவது , மனிதத்தன்மையின் உச்சம் எனவும் பதிவு செய்து வருகின்றனர்.


வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத் தாயகத்தின் அஞ்சலி செலுத்தினர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள சூனாம்பேடு ஊராட்சியில் 60 ஆண்டுகள் பழமையான  ஆலமரம் வெட்டப்பட்டதற்கு எதிராக, பாமகவினர் மற்றும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில், ஈடுபட்டதை தொடர்ந்து  வெட்டப்பட்ட ஆலமரம், வேறு இடத்தில் நடப்பட்டு துளிர்விடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Breaking News LIVE: டெல்லி கனமழை எதிரொலி: விமான நிலையத்தில் மேற்கூரை இடித்து விபத்து
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
IND Vs SA T20 Worldcup Final: 10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா - கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
10 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா-கரையேற்றுவாரா கேப்டன் ரோகித் சர்மா?
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Rohit Sharma: ஐசிசி தொடர்களில் 3 போட்டிகளில் தான் தோல்வி - ஆனால் 3 கோப்பைகளை இழந்த ரோகித் சர்மா..!
Embed widget